சுக்கான்

வேதபகுதி:யாக்கோபு 3:4


கப்பல்கள் அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்பப்படும் வசனம் 4



நாவு என்கிற சிறிய உறுப்பைப்பற்றிப் பெரிய காரியங்களைச் சிந்திக்கலாம். எழுதலாம். அது கடுங்காற்று கடலில் பெருங் கொந்தளிப்பை ஏற்படுத்துவதுபோல நமது வாழ்க்கையையே ஆட்டம் காணச்செய்துவிடுகிறது. நமது சாட்சி வாழ்க்கையை நாற்றத்திற்குள்ளாக்கிவிடுகிறது. எனவே நாம் எச்சரிக்கையோடிருந்து நாவின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.



நாவிலிருந்து மதியீனமான சொற்கள் புறப்பட்டு வருகின்றன. அது நம் செயல்பாடுகளைக் கெடுத்து, மனிதர் நடுவேயுள்ள நல்லுறவை அழித்துவிடுகிறது. அன்பற்ற வாழ்க்கைக்கு நம்மை வழிநடத்துகிறது. எனவே நாவு வெளிப்படுத்தும் வார்த்தைகளைக்குறித்து நாம் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்கவேண்டும்.




நாவின் செயல்பாட்டிற்கும், விருப்பத்திற்கேற்பவும் நமது வாழ்க்கையை அமைக்காமல், நாம் தேவனுடைய விருப்பத்திற்கேற்ப நமது நாவை செயல்படுத்த வேண்டும். பெரிய கப்பல்கள் சிறிய சுக்கானால் திருப்பப்படுவது போல, திருமறைப் போதனைகளால் நாமும் நாவைக் கட்டுப்படுத்தி இறைச்சித்தம் செய்யப்பட நாவை இயக்க வேண்டும்.




சிந்தனை: நான் எப்படி என் நாவை உபயோகப்படுத்துகிறேன்?


ஜெபம்: தேவனே உமது சித்தத்திற்கேற்ப என் நாவை அடக்கிச் செயல்பட பெலமும் மனமுன் தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்