மதியம் வியாழன், 15 நவம்பர், 2007

சிறுத்துப் போனான்

வேதபகுதி: ஆமோஸ் 7 : 1 - 3


யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் சிறுத்துப் போனான் வசனம் 2



ஆண்டவர் மனிதனைப் படைத்து பின்பு அவர்களைப் பார்த்து நீங்கள் பலுகிப் பெருகிப் பூமியை நிரப்புங்கள் என்று ஆசிர்வதிதார். ஆனால் மனிதனோ தேவகிருபை இழந்து தேவசாயலை இழந்து சிறுத்துப் போனான்.



இஸ்ரவேல் ஜனங்கள் தேவன் அன்பும், இரக்கமும், மனதுருக்கமும் நிறைந்தவர் என்று தேவனின் ஒரு பக்க குணங்களைச் சொல்லி தங்களைத் திரும்பத் திரும்ப பாவத்திற்கு அடிமைகளாக்கினர். அதே நேரத்தில் நீதியுள்ள நியாயாதிவதி என்பதை மறந்து நியாயத்தைப் புரட்டி அநியாயம் செய்ததினாலே தேவன் அவர்கள் மீது தமது கோபத்தை ஊற்றினார்.




மேலும் நம் சிறுமை நீங்க அவரைப் பற்றி அறியும் அறிவில் வளர வேண்டும் (2 பேதுரு 1 : 2 ). அவரைப்பற்றி நாம் அதிக ஞானமும், அவருடன் அதிக ஐக்கியமுங்கொள்ளும்போது ஈசாக்கைப் போல மகாபெரியவர்களாவோம் ( ஆதி 26:13)



சிந்தனை: தேவனின் அறிவு வேதனை மறைவு.


ஜெபம்: ஆண்டவரே உம்மை அதிகம் அறிந்துகொள்ள பிரகாசமுள்ள மனக்கண்களைத்தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

மதியம் புதன், 14 நவம்பர், 2007

பாவத்தின் சம்பளம்

வேதபகுதி: ஆமோஸ் 6 : 8 - 14



பெரிய வீட்டைத் திறப்புகள் உண்டாகவும், சிறிய வீட்டை வெடிப்புகள் உண்டாகவும் அடிப்பார். வசனம் 11



இஸ்ரவேல் ஜனங்கள் பாவம் செய்து ஆண்டவரின் கோபம் அவர்களின் மீது எழுந்ததினால் சாபத்திற்குள்ளானார்கள். இஸ்ரவேலரின் மேன்மைகள் தேவனாகிய கர்த்தரால் வெறுக்கப்பட்டது.



இஸ்ரவேல் ஜனங்கள் தேவன் அன்பும், இரக்கமும், மனதுருக்கமும் நிறைந்தவர் என்று தேவனின் ஒரு பக்க குணங்களைச் சொல்லி தங்களைத் திரும்பத் திரும்ப பாவத்திற்கு அடிமைகளாக்கினர். அதே நேரத்தில் நீதியுள்ள நியாயாதிவதி என்பதை மறந்து நியாயத்தைப் புரட்டி அநியாயம் செய்ததினாலே தேவன் அவர்கள் மீது தமது கோபத்தை ஊற்றினார்.



சங்கீதக்காரனாகிய தாவீது கூறுகிறார்; அவர் பூலோகத்தாரை நீதியோடும் சகல ஜனங்களை சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார் என்று கூறுகிறார். எனவே நாம் அனைவரும் நியாயத்தீர்ப்பிற்கு உள்ளானவர்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. எனவே அவருடைய நியாயத்திற்குப் பயந்து அவருடைய நீதிக்கு கீழ்ப்படிந்து வருகின்ற கோபாக்கினைக்கு நம்மை தப்புவித்து அவரோடு நீதியாய் ஆளுகை செய்வோம்.



சிந்தனை: தேவன் அன்புள்ளவர் என்றாலும் அவர் நீதியுள்ள நியாயாதிபதி. எனவே நீதிபதியாம் தேவனுக்கு முன்பாக நடுங்குவோம்.


ஜெபம்: உமது நீதிக்கும், நியாயத்திற்கும் கீழ்ப்படிந்து நடக்க ஞானமுள்ள இருதயத்தைத் தாரும் .ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

மதியம் செவ்வாய், 13 நவம்பர், 2007

வன்முறை தர்பார்

வேதபகுதி: ஆமோஸ் 6 : 1 - 7



தீங்கு நாள் தூரமென்றென்னி கொடுமையின் ஆசனம் கிட்டிவரும்படி செய்து... வசனம் 3



இஸ்ரவேல் ஜனங்கள் உல்லாசமான வாழ்வு வாழ்ந்து வந்தார்கள். அவர்களது வாழ்க்கை விபச்சாரத்தாலும், வேசித்தனத்தாலும், தீய சிந்தனைகளாலும் தங்களைக் கறைப்படுத்திக் கொண்டு தீய செயலுக்கு உள்ளானார்கள்.



மதுபானத்தினால் வெறிகொண்டு வன்முறை போன்ற முறைகேடற்ற செயல்களைச் செய்து சோரம் போனார்கள்.



இஸ்ரவேல் ஜனங்கள் தீங்கு நாட்கள் தூரமென்றெண்ணி கொடுமையின் ஆசனங்கள் தாங்களைக் கிட்டிவரும்படிச் செய்தார்கள்.



பிரியமானவர்களே தேவன் நம்மை அசுத்தத்திற்கு அல்ல, பரிசுத்தத்திற்கென்றே அழைத்திருக்கின்றார். சிறு சிறு பாவங்கள் கூட நம்மை அடிமைப்படுத்திவிடாதபடிக்கு பரிசுத்தமாகவே வாழ அழைத்திருக்கிறார்.



தேவன் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவர். ஆகவே பிரியமானவர்களே, நம்முடைய பாவங்களை அவருக்கு முன்பாக அறிக்கையிடுவோம். நம்முடைய பாவத்தின் மூலம் அவரைக் கோபப்படுத்தாதிருப்போம். ஏனென்றால் தாவீது கூறுகிறார். அவருடைய கோபம் ஒரு நிமிடம் அவருடைய தயவோ நீடிய வாழ்வு. ஆகவே அவரது தயவை நாடி இரக்கத்தைப் பெற்றுக் கொள்வோம்.




சிந்தனை: தீங்கு நாள் தூரமல்லவே. நாம் கடைசி நாட்களில் வந்திருக்கிறோம். ஆகவே தீங்குநாளுக்கு முன் மனந்திரும்பி அவருடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளுவோம்.


ஜெபம்: கர்த்தாவே, உமது ராஜ்ஜியத்துக்குள் பிரவேசிக்க எனக்கு உதவி செய்யும். ஆமேன்.




தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்