உன்னதமானவரின் பிள்ளைகள்

"உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள் , நன்மை செய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்" லூக்கா 6:35

குஷ்டரோகிகள் மத்தியிலே ஊழியம் செய்த கிரகாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது இரு குழந்தைகளையும் எரித்துக் கொன்றார்கள். கிரகாம் ஸ்டெய்ன்ஸ் அவர்களின் துணைவியார் திருமதி.கிளாடிஸ் அம்மையார் அவர்கள் நான் என்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளையும் எரித்துக் கொன்றவர்களை மன்னிக்கிறேன் என்று அறிக்கை விட்டார்கள். இதன் மூலமாக கிறிஸ்துவின் மன்னிப்பின் குணத்தை அநேக மக்கள் அறிந்து கொண்டார்கள். அவர்களது இந்த மன்னிப்பின் குணம் தாங்கள் உன்னதமானவரின் பிள்ளைகள் என்பதை இந்த உலக மக்களுக்கு வெளிப்படுத்தினார்கள்.


நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தான் இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் இப்படிப்பட்ட அறிவுறைகளை மக்களுக்கு வழங்கியதோடு மட்டும் இல்லாது தன்னுடைய வாழ்க்கையிலும் நடத்திக் காட்டினார். பிரதான ஆசாரியர்கள் அவரைப் பிடிக்க வரும்போது பேதுரு பிரதான ஆசாரியனின் வேலைக்காரரின் காதை வெட்டி விடுகின்றான். கர்த்தரோ அந்த பிரதான ஆசாரியரின் வேலைக்காரனின் காதைக் குணப்படுத்தி அற்புதம் செய்தார். ஆம் பிரியமானவர்களே நம்மிடம் இயெசு கிறிஸ்துவிடம் காணப்பட்ட பகைவர்களை நேசிக்கின்ற மன்னிக்கின்ற குணம் காணப்படுகின்றதா? இல்லையென்றால் நாம் இன்றே உன்னதமானவரின் பிள்ளைகளாக மாறுவதற்காக கர்த்தர் நமக்குச் சத்துருக்களைச் சிநேகிக்கின்ற மன்னிக்கின்ற குணத்தை அருளும்படி மன்றாடுவோம்.



சிந்தனை: நான் உன்னதமானவரின் பிள்ளையாக மாறிவிட்டேனா?


ஜெபம்:
அன்பின் தேவனே நான் உம்முடையப் பிள்ளையாக நடப்பதற்கு என்னுடையச் சத்துருக்களைச் சிநேகிக்கவும் மன்னிக்கவும் கூடிய நல்ல குணத்தைத் தந்து வழிநடத்தும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்