நற்கிரியை

"மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது." மத்தேயு 4: 16


வெளிநாட்டில் இருந்து மிஷனெரிகள் நமது நாட்டிற்குச் சுவிஷேசம் அறிவிக்க வந்தார்கள். அவர்கள் ஒவ்வொரு இடங்களிலும் செய்த நற்கிரியைகளைக் கண்டு தான் நமது முன்னோர்கள் இயேசு கிறிஸ்துவைச் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் செய்த நற்கிரியைகள் இன்றும் நமக்குச் சாட்சியாக இருக்கின்றது. ஆனால் இன்று நாமோ பிற மதத்தவர் இகழும் படியானக் காரியங்களைச் செய்து வருகின்றோம். ஆலயங்களிலே ஒருவருக்கு ஒருவர் பிடிக்காமல் சண்டை போட்டுக் கொண்டும், அண்டை வீட்டுக்காரர்களுடன் சமாதானமாக வாழாமல் சண்டை போட்டுக் கொண்டு காவல் நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் அழைந்துக் கொண்டிருக்கிறார்கள்.


இப்படிப்பட்ட காரியங்களைத் தேவன் விரும்பவில்லை. நாம் நற்காரியங்கள் செய்வதைத் தான் தேவன் விரும்புகிறார். நம்மிடத்தில் நற்காரியங்கள் காணப்படவில்லை என்றால் நாம் இன்னும் இருளில் தான் இருக்கிறோம். நாம் நற்கிரியைகள் செய்யும் போது கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படுகின்றது. நம்மால் கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படும் போது நாம் தேவனுடைய சந்நிதியில் நினைக்கப்படுவோம். ஒளியாகிய கிறிஸ்து நம்மிடத்தில் காணப்படுவாராகில் கப்பல்கள் இருளான நேரத்தில் கலங்கரை விளக்கத்திலுள்ள விளக்கைப் பார்த்துச் சரியானப் பாதையில் வருவது போல மற்ற மக்களும் நம்முடைய நற்கிரியைகளைப் பார்த்து கிறிஸ்துவினிடத்தில் வருவார்கள்.




சிந்தனை: நம்முடையக் கிரியைகள் எப்படிப்பட்டவைகளாயிருக்கிறது? நற்கிரியைகளா அல்லது துர்க்கிரியைகளா?

ஜெபம்:
கிருபை நிறைந்த இயேசுவே என்னுடையக் கிரியைகள் மற்றவர்களை உம்மண்டைச் சேர்க்கின்றக் கருவியாகச் செயல்படக் கிருபை புரியும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

நற்கிரியை

"மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது." மத்தேயு 4: 16


வெளிநாட்டில் இருந்து மிஷனெரிகள் நமது நாட்டிற்குச் சுவிஷேசம் அறிவிக்க வந்தார்கள். அவர்கள் ஒவ்வொரு இடங்களிலும் செய்த நற்கிரியைகளைக் கண்டு தான் நமது முன்னோர்கள் இயேசு கிறிஸ்துவைச் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் செய்த நற்கிரியைகள் இன்றும் நமக்குச் சாட்சியாக இருக்கின்றது. ஆனால் இன்று நாமோ பிற மதத்தவர் இகழும் படியானக் காரியங்களைச் செய்து வருகின்றோம். ஆலயங்களிலே ஒருவருக்கு ஒருவர் பிடிக்காமல் சண்டை போட்டுக் கொண்டும், அண்டை வீட்டுக்காரர்களுடன் சமாதானமாக வாழாமல் சண்டை போட்டுக் கொண்டு காவல் நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் அழைந்துக் கொண்டிருக்கிறார்கள்.


இப்படிப்பட்ட காரியங்களைத் தேவன் விரும்பவில்லை. நாம் நற்காரியங்கள் செய்வதைத் தான் தேவன் விரும்புகிறார். நம்மிடத்தில் நற்காரியங்கள் காணப்படவில்லை என்றால் நாம் இன்னும் இருளில் தான் இருக்கிறோம். நாம் நற்கிரியைகள் செய்யும் போது கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படுகின்றது. நம்மால் கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படும் போது நாம் தேவனுடைய சந்நிதியில் நினைக்கப்படுவோம். ஒளியாகிய கிறிஸ்து நம்மிடத்தில் காணப்படுவாராகில் கப்பல்கள் இருளான நேரத்தில் கலங்கரை விளக்கத்திலுள்ள விளக்கைப் பார்த்துச் சரியானப் பாதையில் வருவது போல மற்ற மக்களும் நம்முடைய நற்கிரியைகளைப் பார்த்து கிறிஸ்துவினிடத்தில் வருவார்கள்.




சிந்தனை: நம்முடையக் கிரியைகள் எப்படிப்பட்டவைகளாயிருக்கிறது? நற்கிரியைகளா அல்லது துர்க்கிரியைகளா?

ஜெபம்:
கிருபை நிறைந்த இயேசுவே என்னுடையக் கிரியைகள் மற்றவர்களை உம்மண்டைச் சேர்க்கின்றக் கருவியாகச் செயல்படக் கிருபை புரியும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

உபவாசம்

வேதபகுதி: ஏசாயா 58 : 3 - 14


"விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்@ கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும். அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும், விரல் நீட்டுதலையும், நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி, பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப்போலாகும். கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்."ஏசாயா 58: 8 - 11



இன்று முதல் நாம் லெந்து நாட்களை ஆசரிக்க இருக்கிறோம். இந்த நாட்களில் நாம் பண்ணுகின்ற உபவாசங்கள் எப்படிப்பட்டவைகளாக இருக்கின்றது? கடமைக்காகச் செய்கின்றோமா அல்லது உண்மையாக பரிசுத்த உணர்வோடு செய்கின்றோமா என்று நம்மை நாமே நிதானித்துப் பார்ப்போம். இந்த காலங்கள் கொடுக்கப்பட்டிருப்பதன் நோக்கம் நம்மைத் தற்பரிசோதனை பண்ணி நம்மைத் திருத்திக் கொள்வதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் நாமோ இந்த நாட்களை ஒரு கடமைக்காகச் ஆசரித்து வருகிறோம்.



ஒரு சிலர் இந்த லெந்து நாட்களில் கண்டிப்பாக ஆலயத்திற்குத் தவறாமல் வந்து விடுவார்கள். ஒரு சிலரோ புகை மது போன்ற பழக்கங்களை இந்தக் கிருபையின் நாட்களில் விட்டு விடுவார்கள். ஆனால் ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடியதும் மீண்டுமாக தங்களுடையப் பாவ வாழ்க்கைக்குத் திரும்பி விடுகின்றார்கள். நமது ஆண்டவர் இப்படிப்பட்டக் காரியங்களை விரும்புவது கிடையாது. நாம் கடமைக்காக இப்படி உபவாச நாட்களை ஆசரிப்பாமானால் இறைவனின் ஆசிர்வாதம் நமக்குக் கிடைக்காது. மாறாக நாம் உண்மையுடனும் பரிசுத்தத்துடனும் ஆசரிப்போமானால் மேலே உள்ள வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிர்வாதங்களைத் தேவன் நமக்குத் தந்தருளுவார்.





சிந்தனை: நாம் கடமைக்காக உபவாச நாட்களை ஆசரிக்கின்றோமா? அல்லது உண்மையாக ஆசரிக்கின்றோமா?


ஜெபம்:
ஆண்டவரே நான் இந்தப் பரிசுத்த நாட்களை உண்மையுடனும் பரிசுத்தத்துடனும் ஆசரித்து என் ஆவிக்குரிய வாழ்வில் முன்னேற்றம் அடையக் கிருபை தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

இரு மனம்

நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள்" 1 இராஜாக்கள் 18:21



நர்ஸ் ஒருவருக்கு வெளிநாட்டிற்குச் சென்று சம்பாதிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை இருந்து வந்தது. ஆனால் அவர்களுக்கு எல்லாக் காரியங்களும் தடைபட்டுக் கொண்டே வந்தது. நன்றாக ஆலயத்திற்கு வந்து ஜெபிக்கிற சகோதரி தான். அவர்களது விசுவாசம் தளர்ந்து கொண்டே போனது. அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு பெண் இவரிடம் வந்து நீங்கள் ஒரு கோயில் இருக்கிறது அங்கு அர்ச்சனை செய்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற எல்லாத் தடைகளும் நீங்கி விடும் என்று சொன்னார்கள். இவர்கள் வேண்டாம் எங்களது ஆண்டவர் ஏற்றக் காலத்தில் எல்லாவற்றையும் செய்ய வல்லவர் என்று நிராகரித்தார்கள். அந்த புறமதத்தைச் சார்ந்த பெண்ணும் இவரை விடவில்லை. நீங்கள் வந்து அர்ச்சனை செய்ய வேண்டாம் என்னிடம் பணம் கொடுங்கள் நான் உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து வருகிறேன் என்று கூறினார்கள். இந்தச் சகோதரியும் என்னதான் நடக்கிறது என்று பார்க்கலாம் என்று சொல்லி அந்தப் பெண்ணிடம் பணத்தைக் கொடுத்தார்கள். ஒரு சில நாட்களில் இவருக்கு வெளிநாடு செல்வதற்கு விசா கிடைத்தது. இவரும் வெளிநாடு சென்றார். சந்தோஷமாக விமானம் ஏறிச் சென்றார் ஆனால் அவருக்கு அங்குச் சென்ற பின் தான் மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது காரணம் இவருக்கு நர்ஸ் வேலை கிடைக்கவில்லை மாறாக வீட்டு வேலை தான் கிடைத்து இருந்தது.



ஆம் பிரியமானவர்களே நாமும் உலகக் காரியங்களினால் நம்மைக் கறைப்படுத்திக் கொண்டு வாழ்வோமானால் நமக்கும் இந்தச் சகோதரிக்கு ஏற்பட்ட நிலைமை தான் நமக்கும் ஏற்படும். அவர் வெளிநாடு சென்ற பின் தான் தமது தவறை உணர்ந்தார். கண்ணீர் விட்டார் ஆனால் பயன் ஒன்றுமில்லை. நாமும் இப்படித்தான் "ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்" என்ற பழமொழியைப் போல கிறிஸ்துவும் வேண்டும் உலகக் காரியங்களும் வேண்டும் என்று அலைவோமானால் கர்த்தர் நம்மைக் கைவிட்டுவிடுவார் நாமும் நடு ஆற்றிலே தான் விழ வேண்டியதாயிருக்கும்.



இஸ்ரவேல் ஜனங்கள் பாகால்களைச் சேவிக்கும் போது ஆண்டவர் அவர்களைக் கைவிட்டார். அது போல நாமும் உலகத்தையும் அதின் காரியங்களையும் இச்சித்துச் சேவிப்போமானால் நமக்கும் அழிவு தான் நேரிடும். நமது தனிப்பட்ட வாழ்விலும் குடும்ப வாழ்விலும் ஆசிர்வாதக் குறைவு ஏற்படும்.




சிந்தனை: "தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்." யாக்கோபு 4:8


ஜெபம்:
அன்புள்ள இறைவா நான் உலகத்தின் காரியங்களைப் பின்பற்றாமல் உம்மை மட்டுமே பின்பற்ற உதவி புரியும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்