ரூத் பெற்ற மேன்மை

             “நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாம் அறிவார்கள்.” ரூத் 3:11 (பி)

         மோவாபியர் இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்து தேசத்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்று வரும் போது  இஸ்ரவேல் ஜனங்களை எதிர்த்துப் போரிட்டதினால் கடவுள் அவர்களை விட்டு விலகியிருக்க வேண்டும் அவர்க்ளைக் கர்த்தருடைய சபையில் சேர்க்கக்கூடாது என்று மோசேயின் மூலமாகக் குறிக்கப்பட்ட சந்ததியிலிருந்து வந்த ரூத்தின் சந்ததியில் ராஜாக்களும் விசேஷமாக இயேசு கிறிஸ்துவும் பிறப்பதற்கு ரூத்தினிடத்தில் காணப்பட்ட நற்குணங்கள்.

1. யெகோவா தேவனைக் கடவுளாக ஏற்றுக் கொண்டாள்:

                ரூத் விக்கிரக வழிபாடுகளை உடைய சந்ததியில் பிறந்து விக்கிரக வழிபாட்டை உடையப் பெண்ணாய் இருந்தாலும் உண்மைக் கடவுளான யெகோவா தேவனைத் தன்னுடையக் கடவுளாக ஏற்றுக்கொண்டு தன்னுடைய எல்லா வழிபாடுகளையும் விட்டு விட்டு யெகோவா தேவனை மாத்திரம் வணங்குகின்றப் பெண்ணாக மாறினாள்.

2. மாமியாரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தாள்:

      ரூத் தன்னுடைய தேசத்தையும் தன்னுடைய இனத்தாரையும் உறவினர்களையும் விட்டு விட்டு இஸ்ரவேல் தேசத்திற்குத் தன்னுடைய மாமியாரோடு கூட வந்த பின்பு தன்னுடைய மாமியார் சொன்ன எல்லா வார்த்தைகளுக்கும் கீழ்ப்படிந்து நடந்து வந்தாள்.

3. உழைக்கும் பெண்ணாகத் திகழ்ந்தாள்:

             ரூத் இஸ்ரவேல் தேசத்திற்கு வந்தப்பின்பாக தன்னுடைய மாமியார் யாரிடமாவது உணவிற்காகத் தானியத்தைப் பெற்றுத் தருவார் என்று நினைத்து வீட்டிலே சும்மா உட்கார்ந்து கொள்ளாமல் தனக்காவும் தன்னுடைய மாமியாருக்காகவும் உணவு சேகரிப்பதற்காகக் கிளம்பிச் சென்று உணவு சேகரிக்கும் பெண்ணாகத் திகழ்ந்தாள்.

4. கற்பைக் காத்துக் கொண்டாள்:

             ரூத் தன்னுடையக் கணவன் மரித்தப் பின்பு வேற்று மனிதர்கள் பின்னாடிச் சென்று தன்னுடையக் கற்பைக் கெடுத்துக் கொள்ளாமல் தன்னுடைய மாமியாரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து போவாஸை மணமுடித்து ராஜாக்களின் சந்ததிக்குக்த் தாயானாள்.


         இஸ்ரவேல் ஜனங்களாலும் கடவுளாலும் வெறுக்கப்பட்ட சந்ததியில் பிறந்த பெண்ணாக இருந்தாலும் தன்னுடைய நல்ல நடக்கைகளால் ரூத் மேன்மையைப் பெற்றுக் கொண்டாள்.




சிந்தனை: ரூத்திடம் காணப்பட்ட நற்குணங்கள் நம்மிடம் காணப்படுகின்றனவா?

ஜெபம்: கிருபை நிறைந்த நல்ல ஆண்டவரே நாங்களும் உம்மை உறுதியாகப் பற்றிக் கொண்டு உமக்குக் கீழ்ப்படிந்து உமக்குப் பிரியமாய் வாழ்ந்து மேன்மையைப் பெற்றுக் கொள்ள உதவி புரிந்தருளும். ஆமேன்.