யாருக்கு ஞானம்

வேத பகுதி: பிரசங்கி 2: 26

"தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்" பிரசங்கி 2: 26

பாவமான இந்த உலகில் நல்லவர்களாகவும் நன்மை செய்பவர்களாகவும் வாழ்வது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் தேவன் தனக்குப் பயந்து பிரியமானவர்களாய் நடப்பவர்களுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார். கர்த்தர் நமக்குத் தந்திருக்கிற அவருடைய எல்லாக் கட்டளைகளையும் நியாயங்களையும் நாம் கைக்கொண்டு நடக்கும்போது தேவன் நமக்கு ஞானத்தையும் அறிவையும் தர வல்லவராயிருக்கிறார்.

வேதாகமத்தில் பார்ப்போமென்றால் தானியேலும் அவனது நண்பர்களான சாத்ராக், மேஷாக், ஆபேத் நேகோ என்பவர்கள் போஜன பதார்த்தத்தினாலும் திராட்சைரசம் மற்றும் மதுபானங்களாலும் தங்களைத் தீட்டுப்படுத்தாதபடி பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்தார்கள். அப்படி அவர்கள் பரிசுத்தமாய் வாழ்ந்தபடியினால் தேவன் அவர்களுக்கு விஷேசித்த ஞானத்தையும் அறிவையும் புத்தியையும் கொடுத்து உயர்ந்த இடங்களில் அவர்களை வைத்து ஆசீர்வதித்தார். நாமும் ஆண்டவருடையை வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து அவருக்குப் பிரியமாய் வாழும் போது நம்மையும் ஆசீர்வதிக்க வல்லவராயிருக்கிரார்

சிந்தனை: நாம் தேவனுக்குப் பிரியமானவர்களாயிருக்கிறோமா?

ஜெபம்: கிருபையுள்ள ஆண்டவரே நான் உம்முடைய பார்வைக்குப் பிரியமாய் நடந்து உம்மிடத்தில் இருந்து உன்னதமான ஞானத்தைப் பெற்றுக்கொள்ள அருள் புரியும். எங்கள் ஆண்டவர் இயேசுவின் மூலம் வேண்டிக்கோள்கிறோம் நல்ல. பிதாவே. ஆமேன்

தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்