தீமையின் பலன்

"பொல்லாப்பை தேவன் அவன்மேல் திரும்பும்படி செய்தார்." நியாயாதிபதிகள் 9:56 பி


காண்ட்ரக்டர் ஒருவர் ஒரு கட்டுமான நிருவனத்திற்குப் பல பணிகளைச் செய்து கொடுத்து வந்தார். தனக்கு வயதாகிவிட்டபடியினால் இனிமேல் தன்னால் அப்படி காண்ட்ராக்ட் எடுத்துச் செய்ய முடியாது என்று அந்த நிறுவனத்தின் தலைவரிடம் சொன்னார். அதற்கு அந்த நிறுவனத்தின் தலைவர் சரி கடைசியாக ஒரே ஒரு வீடு மட்டும் காண்ட்ராக்டில் கட்டிக் கொடுங்கள் என்று சொன்னார். இவரும் அந்த வீட்டை மிகவும் மலிவான பொருள்களைக் கொண்டு தரமில்லாமல் அந்த வீட்டைக் கட்டி முடித்தார். வீட்டின் திறப்பு விழாவிற்கு அந்தக் காண்ட்ரக்டரை குடும்பத்தோடு அழைத்தார். அந்தத் திறப்பு விழாவில் அந்த நிறுவனத்தின் தலைவர் காண்ட்ரக்டரிடம் இதுவரை எங்களது நிறுவனத்திற்கு நீங்கள் செய்த பணிக்காக இந்த வீட்டை உனக்குச் சொந்தமாகத் தருகிறேன் என்றார். காண்ட்ரக்டருக்கு தலை சுற்றியது. ஐயோ இந்த வீடு எனக்கு என்று முன்பதாகத் தெரிந்திருந்தால் நான் தரமானப் பொருள்களைக் கொண்டு கட்டியிருப்பேனே என்று அவன் புலம்பினான் .



ஆம் பிரியமானவர்களே நாம் செய்கின்ற தீமையான எல்லாச் செயல்களும் மீண்டும் நம்மை நோக்கியே வரும். அபிமெலேக்கின் வாழ்க்கையிலும் இது தான் பலித்தது. தன்னுடைய சகோதரர்கள் 70 பேரையும் கொலை செய்து விட்டு சீகேமின் அரசனாக மாறினான். இவனுடைய இந்தத் தீமையானச் செயலுக்கு சீகேமின் மனுஷரும் உடந்தையாக இருந்தார்கள். முடிவிலே சீகேமின் மனுஷருக்கும் அபிமெலேக்கிற்கும் பிரிவினை உண்டாகின்றது. முடிவிலே அபிமெலேக்கின் மரணம் ஒரு பெண்ணால் வருகின்றது. அபிமெலேக்கு செய்த எல்லாத் தீமையானக் காரியங்களுக்கும் கர்த்தர் அவனுக்குப் பதிலளித்தார்.




சிந்தனை: தன் வினை தன்னைச் சுடும்.


ஜெபம்:
அன்பின் தேவனே நான் நன்மையானக் காரியங்களைச் செய்வதற்கு எனக்குப் பெலன் தந்து தீமையானக் காரியங்களுக்கு என்னை விலக்கிக் காத்தருளும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்