தானியேலின் தீர்மானம்

வேதபகுதி: தானியேல் 1: 3 - 20


"தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்." தானியேல் 1:8


தானியேல் தான் பாபிலோன் அரசனால் சிறைபிடிக்கப்பட்டு வந்தாலும், பாபிலோனில் உள்ளப் பாவக் காரியங்களால் தன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று தீர்மானம் பண்ணுகின்றான். தீர்மானம் பண்ணுவதோடு நின்று விடாமல் ஜெபத்தோடு கூட அந்தத் தீர்மானம் நிறைவேறுவதற்காக வேண்டிய முயற்சிகளை எடுக்கின்றான். தேவன் தானியேலின் தீர்மானம் நிறைவேறப் பிரதானிகளின் தலைவனுடைய கண்களில் தயவு கிடைக்கும்படிச் செய்தார். மேலும் ராஜபோஜனத்தை உண்கின்ற மற்ற வாலிபர்களைக் காட்டிலும் தானியேல் மற்றும் அவருடைய நண்பர்களின் முகம் களையுள்ளதாயும் சரீரம் புஷ்டியாகவும் மாறச் செய்தார். மேலும் மற்ற மனிதர்களைக் காட்டிலும் ஞானத்தையும் அறிவையும் சாமர்த்தியத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார்.


நாம் எப்படிப்பட்டத் தீர்மானங்களை நம்முடைய வாழ்க்கையில் எடுக்கின்றோம் அல்லது நாம் எடுத்தத் தீர்மானங்களில் நிலைத்து நிற்கின்றோமா? ஏதோ புதிய வருடங்களில் அல்லது நற்செய்திக் கூட்டங்களில் தீர்மானங்களை மட்டும் எடுக்கின்றவர்களாக இருக்கின்றோமா? அல்லது தீர்மானங்களை நிறைவேற்றிக் கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்துகின்றவர்களாக இருக்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம் . கிறிஸ்துவுக்குள்ளாக நல்ல தீர்மானங்களை எடுப்போம், எடுத்தத் தீர்மானங்களுக்காக ஆண்டவரிடம் மன்றாடுவோம். தீர்மானங்களை நிறைவேற்றுவோம், கர்த்தர் தானியேலைப் போல நம்மையும் உயர்த்தி ஆசீர்வதிப்பார்.



சிந்தனை: நாம் எடுத்தத் தீர்மானங்களில் நிலைத்து நிற்கின்றோமா?


ஜெபம்:
கிருபையும் இரக்கமும் நிறைந்த தேவனே, நான் உமக்குள்ளாகத் தீர்மானங்களை எடுக்கவும் அந்தத் தீர்மானங்களில் நிலைத்து இருக்கவும் தேவ ஒத்தாசையையும் கிருபையையும் தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்