இஸ்ரவேலுக்குத் தண்டனை

வேதபகுதி:ஆமோஸ் 2 : 6 - 16


இஸ்ரவேல் நீதிமானைப் பணத்திற்கும் எளியவனை ஒரு ஜோடு பாதரட்சைக்கும் விற்றுப் போட்டார்களே. வசனம் .6



இஸ்ரவேலர் கானானியருடைய பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொண்டதோடு, பாகால் வணக்கத்திலும் பழகிக் கொண்டார்கள். ஒரே தேவ வணக்கத்தை விட்டுவிட்டுப் பல தேவர்களையும் சேவித்தார்கள்.



இவ்விதமாய் எகிப்திலிருந்து விடுவித்து கானானைச் சுதந்திரமாய்க் கொடுத்த தேவனை மறந்தார்கள். மோவாபியரும் அம்மோனியரும் இஸ்ரவேலரைக் கொள்ளையடித்தார்கள். பெலிஸ்தியர் இஸ்ரவேலருக்கு இடுக்கன் செய்தார்கள்.



ஒருமுறை சர் ஐசக் நியூட்டன் என்ற புகழ் வாய்ந்த விஞ்ஞானியை ஒருவர் பார்த்து"ஐயா நீங்கள் கண்டுபிடித்த நூற்றுக்கணக்கான கண்டுபிடிப்புகளிலே மிகச்சிறந்த கண்டுபிடிப்பு எது? என்று வினவ என் பாவங்களை மன்னிக்க இயேசுவின் இரத்தமே அல்லாமல் வேறொன்றும் இல்லை என்ற கண்டுபிடிப்புதான்" என்று சொன்னாராம்.



ஆமோஸ் கால மக்கள் தேவன் காட்டும் ஜீவ வழியை விரும்பவில்லை. கர்த்தருடைய வேதத்தை வெறுத்தார்கள். தீர்க்கதரிசிகளை நோக்கி நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டாம் என்று கற்பித்தார்கள். இவ்விதமாய் அவர்கள் அழிவின் பாதையைத் தெரிந்து கொண்டார்கள்.



நாம் எப்படிப்பட்டப் பாதையைத் தெரிந்துக் கொண்டிருக்கிறோம்? அழிவின் பாதையா? ஜீவனுக்கேதுவான பாதையா?



சிந்தனை: நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. நீதிமொழிகள் 12:28


ஜெபம்: கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

மோவாபின் பாவம்

வேதபகுதி:ஆமோஸ் 2:1 - 3


மோவாப் ஏதோமுடைய ராஜாவின் எலும்புகளை நீறாகச் சுட்டுப் போட்டானே. வசனம் 1



இஸ்ரவேலர் பிரயாணமாய் இந்தத் தேசத்துக்கு வந்தபோது அவர்களோடு யுத்தம் செய்யவில்லை (நியா 11:15). பின்பு நியாயாதிபதிகளின் நாட்களில் மோவாபிய இராஜாவாகிய எக்லோன் இஸ்ரவேலரைப் பதினெட்டு வருட காலம் ஒடுக்கினான்.



இப்படி அவர்கள் செய்த அநேக பாவங்களினிமித்தம் தேவன் அவர்களை அழித்துப் போடுவேன் என்று தேவன் ஆமோஸ் தீர்க்கதரிசியின் மூலமாக எச்சரிக்கிறார்.



நாம் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். கடமைக் கிறிஸ்தவராகவா அல்லது உண்மைக் கிறிஸ்தவராகவா? நம் வாழ்க்கையைச் சீர் தூக்கிப் பார்ப்போம். கிருபையின் காலத்தில் இருக்கின்ற நாம் இப்பொழுதே மனம் திரும்பி இயேசுவி அடிச்சுவடுகளை பின்பற்றி நடந்து தேவ ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொண்டு நரக ஆக்கினைக்குத் தப்புவோம். கிறிஸ்துவின் வருகை மிகவும் சமீபமாயிருக்கிறது.



சிந்தனை: இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள், கேட்டுக்குப் போகிற வாசல் விருவும், வழி விசாலமுமாயிருக்கிறது


ஜெபம்: தேவனே ஜீவனுக்கேதுவான வழியில் நடப்பதற்கு உமது நித்தியக் கிருபையைத் தாரும். ஆமேன்.




தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

அம்மோனியாவின் பாவம்

வேதபகுதி:ஆமோஸ் 1:13 - 15


அம்மோன் புத்திரர் தங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்கும்படிக்குக் கீலேயாத்தின் கர்ப்பஸ்திரீகளை கீறிப்போட்டார்களே. வசனம் .13



அம்மோன் புத்திரர் செய்த பாவங்களினிமித்தம் அவர்கள் மேல் வரும் ஆக்கினையத் திருப்பமாட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.இந்த அம்மோன் புத்திரர் லோத்தின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.



அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ் மரித்தபோது, இஸ்ரவேலில் ராஜாவாயிருந்த தாவீது அவனுடைய குமாரனுக்கு ஆறுதல் கூறுவதற்கு ஸ்தானாதிபதிகளை அனுப்பிய போது, அம்மோன் புத்திரர், ஸ்தானாதிபதிகளை அவமானப்படுத்தி அனுப்பினார்கள். (1 நாளாகமம் 19). இப்படி மற்றவர்களைப் பழித்தல், அவமானப்படுத்துதல் போன்ற தேவனுக்குப் பிரியமில்லாத காரியங்களில் ஈடுபட்டார்கள். இவர்களைத் தேவன் பல்வேறு தீர்க்கத்தரிசிகளின் மூலமாக எச்சரிக்கிறார். ஆனாலும் அவர்கள் தங்கள் பாவங்களை விட்டு மனம் திரும்பவேயில்லை. ஆகவே தேவன் அவர்களை அழிக்க நினைக்கிறார்.



நாமும் தேவனுடைய ஊழியக்காரர்களின் மூலமாக கொடுக்கும் எச்சரிப்புகளுக்கு அசட்டையாக இருப்போமானால் நம்முடைய வாழ்க்கையும் கேள்விக்குறியதாக இருக்கும். தேவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்து தேவ ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளுவோம்.



சிந்தனை: தேவன் கொடுக்கும் எச்சரிக்கைக்குக் கீழ்ப்படிந்து நட.


ஜெபம்: தேவனே உமது வசனத்திற்குக் கீழ்ப்படிந்து நடக்கக் கிருபை தாரும்.ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

ஏதோமுக்குத் தண்டனை

வேதபகுதி:ஆமோஸ் 1:11 - 12


எதோம் தன் சகோதரனை பீறிப்போட்டு, தன் மூர்க்கத்தை நித்திய காலமாக வைத்திருக்கிறானே. வசனம் 11.



ஏதோமின் பூர்விகத் தலைநகர் போஸ்றா, ஏதோமியர் இஸ்ரவேலரைத் தங்கள் தேசத்தின் வழியாய் போக இடங்கோடுக்கவில்லை. மோசே காதேசிலிருந்து ஏதோமின் இராஜாவினிடத்திர்கு ஸ்தானாபதிகளை அனுப்பி எகிப்திலிருந்தே தேவன் எங்களை விடுவித்தார். எனவே உங்கள் தேசத்தின் வழியாய் கடந்து செல்ல பல நிபந்தனைகளோடே அனுமதி கேட்டும் கொடுக்கவில்லை. இதனால் இஸ்ரவேல் அவனை விட்டு விலகிப்போனார்கள்.



சவுல் இராஜாவாயிருந்த நாட்களில் இவர்களோடு யுத்தம் செய்து தோற்கடித்தான் (1 சாமுவேல் 14:47). பிற்பாடு தாவீதும் அப்படியே செய்தான் (11 சாமுவேல் 8:14). நேபிகாத்நேச்சார் எருசலேமை முற்றுகையிட்டபோது இவர்கள் அவனோடு சேர்ந்திருந்தார்கள்.



சார்லஸ் பின்னி தன் ஊழியத்தில் சிறிது வல்லமை குறைந்து விட்டாலும் உடனே உபவாசித்து, ஜெபித்து, கண்ணீரோடு தன் குறைவுகளி அறிக்கை செய்து புதுபெலனைப் பெற்றுக் கொள்ளுவார்.



தேமான் என்பது ஏதோம் தேசத்திலுள்ள ஒரு கோத்திரமும் அதைச் சார்ந்த நாடாகும். இந்தக் கோத்திரத்தார் அறிவில் சிறந்தவர்கள் என்று மற்ற ஜனங்கள் யாவரும் நினைத்தார்கள். யோபுவுக்குப் புத்தி சொன்னவர்களில் ஒருவன் இந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவன்.



சிந்தனை: முதலாவது உன் ஜீவியத்தில் காணும் குறைகளைக் கண்டு பிடிக்க எத்தனி.


ஜெபம்: ஆண்டவரே, என்னிலுள்ள பிடிவாதத்தை அகற்றும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்