வேதபகுதி:ஆமோஸ் 2:1 - 3
மோவாப் ஏதோமுடைய ராஜாவின் எலும்புகளை நீறாகச் சுட்டுப் போட்டானே. வசனம் 1
இஸ்ரவேலர் பிரயாணமாய் இந்தத் தேசத்துக்கு வந்தபோது அவர்களோடு யுத்தம் செய்யவில்லை (நியா 11:15). பின்பு நியாயாதிபதிகளின் நாட்களில் மோவாபிய இராஜாவாகிய எக்லோன் இஸ்ரவேலரைப் பதினெட்டு வருட காலம் ஒடுக்கினான்.
இப்படி அவர்கள் செய்த அநேக பாவங்களினிமித்தம் தேவன் அவர்களை அழித்துப் போடுவேன் என்று தேவன் ஆமோஸ் தீர்க்கதரிசியின் மூலமாக எச்சரிக்கிறார்.
நாம் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். கடமைக் கிறிஸ்தவராகவா அல்லது உண்மைக் கிறிஸ்தவராகவா? நம் வாழ்க்கையைச் சீர் தூக்கிப் பார்ப்போம். கிருபையின் காலத்தில் இருக்கின்ற நாம் இப்பொழுதே மனம் திரும்பி இயேசுவி அடிச்சுவடுகளை பின்பற்றி நடந்து தேவ ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொண்டு நரக ஆக்கினைக்குத் தப்புவோம். கிறிஸ்துவின் வருகை மிகவும் சமீபமாயிருக்கிறது.
சிந்தனை: இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள், கேட்டுக்குப் போகிற வாசல் விருவும், வழி விசாலமுமாயிருக்கிறது
ஜெபம்: தேவனே ஜீவனுக்கேதுவான வழியில் நடப்பதற்கு உமது நித்தியக் கிருபையைத் தாரும். ஆமேன்.
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்
0 comments:
கருத்துரையிடுக