திராட்சைச் செடி

வேதபகுதி: யோவான் 15 : 1 - 17


"நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்." யோவான் 15 : 16



இந்தப் பகுதியில் இயேசு கிறிஸ்து நம்மைப் பார்த்து உங்களை நான் தெரிந்துக் கொண்டேன் என்று கூறுகிறார். அவர் நம்மைத் தம்முடைய சொந்த ஜனமல்லாவர்களாயிருந்தாலும் நம்மைத் தெரிந்து கொண்டு நம்மை ஆசீர்வதிப்பதற்காக நம்மைப் பெயர் சொல்லி அழைக்கிறார்.நாம் திராட்சைசெடியாகிய இயேசுவில் கொடியாக நிலைத்திருக்கும்படியாக நம்மை அழைக்கிறார். நாம் திராட்சைச் செடியாகிய இயேசு கிறிஸ்துவில் கொடியாக நிலைத்திருந்து கனிகொடுக்கும்படியாக நம்மை அழைக்கிறார். நாம் அப்படிக் கிறிஸ்துவில் நிலைத்திருக்கும் போது அவர் நம்மை இந்த உலகப்பிரகாரமாக உள்ள ஆசீர்வாதங்களினாலும் உன்னதங்களிலுள்ள ஆசீர்வாதங்களினாலும் நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவார்.



நம்மை ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்து அவருடைய அவருடைய அடிச்சுவடிகளைப் பின்பற்றி நடப்போமானால் நம்மை இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களினால் ஆசீர்வதிப்பார். கிறிஸ்து நம்முடைய வாழ்க்கையின் தலைவராக இருப்பாரானால் நம்மை இந்த உலகத்தில் எதிர்த்து நிற்ப்பவன் யார்?





சிந்தனை: நான் திராட்சைச் செடியாகியக் கிறிஸ்துவில் நிலைத்திறுக்கிறேனா?


ஜெபம்:
தேவனே நான் உம்மில் நிலைத்திருந்து நற்கனிகளைக் கொடுக்கக் கிருபை தாரும். ஆமேன்



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

செவ்வைப்படுத்துபவர்

வேதபகுதி: ஏசாயா 45:1 - 6

"நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்."ஏசாயா 45:2


இந்தப் பகுதியில் கோரேஸ் ராஜாவைக் குறித்து ஏசாயா தீர்க்கன் மூலமாக நான் அவனை எல்லா ஜாதிகளுக்கும் முன்பாக உயர்த்தி, அவன் செய்கின்ற எல்லாக் காரியங்களிலும் உள்ள கோணலானவைகளை செவ்வைப்படுத்தி நேர்ப்படுத்துவேன் என்று கர்த்தர் கூறுகிறார். இந்தக் கோரேஸ் ராஜா இஸ்ரவேல் ஜனங்கள் அடிமைகளாக இருந்த பாபிலோன் தேசத்தை அரசாண்டவன். இந்தக் கோரேஸ் ராஜாவுக்கு அவன் அந்நிய ஜனத்திற்கு ராஜாவாயிருந்தாலும் கர்த்தர் அவனுக்கு இப்படிப்பட்ட ஆசிர்வாதங்களை எதற்காகக் கொடுத்தார் என்று பார்ப்போமானால்,கோரேஸ் ராஜா தான் அரசாளும் போது நேபுகாத்நேச்சாரால் இடிக்கப்பட்ட எருசலேமின் தேவாலயத்தைக் கட்டுவதற்குத் தன்னுடையக் கஜானாவிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தான். மேலும் அவன் நேபுகாத்நேச்சார் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து பாபிலோனுக்கு எடுத்துக் கொண்டு வந்தப் பொக்கிஷங்கள் எல்லாவற்றையும் கொடுத்து அனுப்பினான். மேலும் அடிமைகளாக இருந்த இஸ்ரவேல் ஜனங்களில் சிலரை எருசலேம் ஆலயத்தை எடுப்பித்துக் கட்டுவதற்காக அனுப்பினான்.


இப்படி கோரேஸ் செய்த நற்காரியங்கள் பல. எனவே தான் கர்த்தர் அவனைப் பார்த்து நான் உனக்கு முன்பாகக் கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் என்று உரைக்கிறார். நாமும் நம்மால் முடிந்த நற்காரியங்களைக் கிறிஸ்துவின் நாம மகிமைக்காகச் செய்வோமானால் நாம் செல்கின்றப் பாதையில், நம்முடைய குடும்ப வாழ்க்கையில், மேலும் நம்முடைய அலுவலகக் காரியங்களில் நமக்கு இருக்கின்றத் தடைகளை எல்லாம் அகற்றிக் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார், மாறாக நாம் கர்த்தருக்குப் பிரியமல்லாதக் காரியங்களையேச் செய்து வந்தோமானால் நம்முடைய வாழ்க்கையில் உள்ளத் தடைகள் தடைகளாகவே இருக்கும்




சிந்தனை: " தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப்போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்." மீகா 2 : 13

ஜெபம்:
கர்த்தாவே என்னுடைய வாழ்க்கையில் தடைகள் ஏதும் வராதபடி அதற்கு நான் உண்மையும் சாட்சியுமாய் நடக்கக் கிருபை தாரும். ஆமேன்.
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

மறவாத ஆண்டவர்

வேதபகுதி: ஏசாயா 44: 21 - 22

"நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை." ஏசாயா 44: 21


இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தர் தங்களுக்குச் செய்த அதிசயங்களை எல்லாம் மறந்து விட்டுத் தங்கள் தேவனாகியக் கர்த்தரை மறந்துப் போனார்கள். ஆகையினால் அவர்களை அருகில் இருந்த ராஜாக்களுக்கு அடிமைகளாக விற்றுப்போட்டார். கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களைத் தங்களுடைய பாவங்களை விட்டுத் திரும்பும்படி அவர்களைப் பல்வேறு தீர்க்கதரிசிகளின் மூலமாக எச்சரிக்கிறார்.அவர்கள் தங்களுடையப் பாவங்களை விட்டு மனந்திரும்பினபோதோ அவர்களைச் சுற்றியிருந்த எல்லாக் கட்டுகளில் இருந்தும் விடுவித்தார்.


நம்முடையத் தேவனாகியக் கர்த்தர் நம்மைத் தன்னுடைய உள்ளங்கைகளில் வரைந்துப் பாதுகாத்து வருகிறார். ஆனால் நாமோ பல வேலைகளில் கர்த்தரை மறந்து விட்டு உலகப்பிரகாரமானக் காரியங்களில் சிக்குண்டுத் தவித்துக் கொண்டிருக்கிறோம். நாம் கர்த்தரிடம் திரும்புவோமானால் அவர் நம்முடைய மீறுதல்களை மேகத்தைப் போலவும் நம்முடையப் பாவங்களைக் கார்மேகத்தைப் போலவும் அகற்றிவிட்டேன் என்னிடத்தில் மனந்திரும்பு என்று கர்த்தர் உரைக்கிறார். ஆனால் இன்னும் நம்முடையப் பாவ வாழ்க்கையிலேயே வாழ்ந்துக் கொண்டிருப்போமானால் நம்மை மறவாத ஆண்டவரிடம் இன்றே அர்ப்பணிப்போம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.




சிந்தனை: என்னை மறவா யேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்

ஜெபம்:
என்னை மறவாத அன்பின் நேசரே நான் என்னையே உம்மிடம் தருகிறேன் நீரே ஏற்று வழிநடத்தும் .ஆமேன்


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்