சாட்சியுள்ள வாழ்க்கை

வேதபகுதி: மாற்கு 5 : 1 - 20


"நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார்" மாற்கு 5 : 19

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கதரேனருடைய நாட்டில் உள்ள லேகியோன் பிசாசு பிடித்திருந்த மனிதனைக் குணமாக்கினார். குணமாக்கப்பட்ட அந்த மனிதன் ஆண்டவரிடம் வந்து தானும் ஆண்டவருடன் கூட இருக்கும்படியாக ஆணடவரிடம் வேண்டிக்கொள்ளுகின்றான். ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நீ போய் உன்னுடைய இனத்தாரிடத்திலும் உன்னுடைய ஜனத்தினிடத்திற்கும் போய் ஆண்டவர் உனக்குச் செய்த நன்மைகளை அறிவி என்று அவனுக்குச் சொன்னார். அந்தப்படியே அந்த மனிதனும் ஆண்டவர் அவனுக்குச் செய்த நன்மைகள் யாவற்றையும் அந்தப் பகுதி முழுவதும் பிரசித்தப்படுத்தினான்.

ஆம் பிரியமானவர்களே நம்மையும் நம்முடையக் குடும்பத்தினருக்கு முன்பாகவும் நாம் வசிக்கின்றப் பகுதியிலும் ஆண்டவருக்கு நற்சாட்சியாக வாழ இயேசு நம்மை அழைக்கின்றார். நாம் வசிக்கின்றப் பகுதியிலும் நம்முடையக் குடும்பத்திலும் சாட்சியாக வாழாமல் நம்மால் கிறிஸ்துவுக்குள்ளாக வளர முடியாது, ஊழியம் செய்யவும் முடியாது. நாம் நம்முடைய நடக்கையினாலும் சாட்சியினாலும் பரிசுத்தமான வாழ்க்கையினாலும் நம்முடையக் குடும்பத்தில் உள்ள மக்களையும் நாம் வசிக்கின்றப் பகுதியுலுள்ள மக்களையும் கிறிஸ்துவுக்காக ஆதாயம் பண்ணமுடியும்.


சிந்தனை: என்னுடையக் குடும்பத்திலும் நான் வசிக்கின்றப் பகுதியிலும் சாட்சியாக வாழ்கின்றேனா?

ஜெபம்:
அன்பின் தேவனே நான் என்னுடையக் குடும்பத்திற்கும் நான் வசிக்கின்றப் பகுதியிலும் உமக்குச் சாட்சியாகவும் பரிசுத்தமாகவும் வாழக் கிருபை தாரும். ஆமேன்.
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்