அன்பு

"நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன்." 1 கொரிந்தியர் 13:1

             இந்த அதிகாரத்தில் பவுல் அப்போஸ்தலன் அன்பு உள்ளவர்களிடத்தில் காணப்படவேண்டிய நற்குணங்களைப் பட்டியலிட்டுள்ளார்.

  • தீர்க்கதரிசன வரத்தை உடையவவர்களாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவர்களாயிருந்தாலும், அவர்கள் ஒன்றுமில்லை.(ZERO,பூஜ்ஜியம்).
  • மனிதர்கள் தங்களுக்கு உண்டான யாவற்றையும் அன்னதானம்பண்ணினாலும், அவர்கள் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு இல்லை என்றால் அவர்களுக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.
  • அன்பு உள்ள மனிதர்கள்  சாந்தமும் தயவுமுள்ளவர்களாயிருப்பார்கள்; 
  • அன்பு உள்ள மனிதர்கள் பொறாமையில்லாதவர்களாயிருப்பார்கள்; 
  • அன்பு உள்ள மனிதர்கள்  தங்களைத் தாங்களே புகழுகின்றவர்களாய் இருக்க மாட்டார்கள்,
  • அன்பு உள்ள மனிதர்கள் இறுமாப்பாயிருக்கமாட்டார்கள்
  • அன்பு உள்ள மனிதர்கள் அயோக்கியமானதைச் செய்ய மாட்டார்கள்
  • அன்பு உள்ள மனிதர்கள் தற்பொழிவை நாட மாட்டார்கள்
  • அன்பு உள்ள மனிதர்கள் சினமடைய மாட்டார்கள்
  • அன்பு உள்ள மனிதர்கள் தீங்கு நினைக்க‌ மாட்டார்கள்,
  • அன்பு உள்ள மனிதர்கள் அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படுவார்கள்.
  • அன்பு உள்ள மனிதர்கள் சகலத்தையும் தாங்குவார்கள், 
  • அன்பு உள்ள மனிதர்கள் சகலத்தையும் விசுவாசிப்பார்கள், 
  • அன்பு உள்ள மனிதர்கள் சகலத்தையும் நம்புவார்கள்.
  • அன்பு உள்ள மனிதர்கள் சகலத்தையும் சகிப்பார்கள், \
  • அன்பு உள்ள மனிதர்கள் ஒருக்காலும் ஒழிந்து போவதில்லை.



சிந்தனை: நான் அன்புடன் நடந்து கொள்கின்றேனா? "அன்பே பெரியது."

ஜெபம்: அன்பின் ஆண்டவரே மாயமான இந்த உலகத்தில் நான் அன்புடன் நடந்து கொள்ள என்னை உம்முடைய அன்பினால் நிரப்பி என்னை வழி நடத்தியருளும். ஆமேன்