வீண் ஆசரிப்புகள்

வேதபகுதி:ஆமோஸ் 5 : 21- 27


உங்கள் பண்டிகைகளைப் பகைத்து வெறுக்கிறேன்; உங்கள் ஆசரிப்பு நாட்களில் எனக்குப் பிரியமில்லை. வசனம் .21



இஸ்ரவேல் ஜனங்களின் பண்டிகை பலிகளைத் தேவன் வெறுக்கிறார். பலியைப் பார்க்கிலும் நீதியும், உண்மையும், மனத்தாழ்மையுமான வாழ்க்கை வாழ்வதையே தேவன் விரும்புகிறார்.



மீகா 6:8ல் கூறப்பட்டிருக்கிறது; மனுஷனே, நன்மை இன்னதென்று தேவன் நமக்கு அறிவித்திருக்கிறார்.



எது எளிமையான காரியங்கள்
1. நியாயஞ்செய்தல் 2.இரக்கத்தை சிநேகித்தல் 3. தேவனுக்கும் மனிதருக்கும் முன்பாக மனத்தாழ்மையாய் நடத்தல். இவைகளே பலியைப் பார்க்கிலும் பண்டிகையைப் பார்க்கிலும் தேவனுக்குப் பிரியமானவைகள்.



ஒரு அரசு அலுவலகத்தில் நேர்மையாய்ப் பணியாற்றிக் கொண்டிருந்த கிறிஸ்தவ சகோதரர் ஒருவர் அவரது மேலதிகாரியால் அநேக உபத்திரவங்கள் அனுபவித்தார். ஆனாலும் இந்த சகோதரர் தன் நேர்மையில் இருந்து சற்றும் வழிவிலகவில்லை. நன்மையே செய்து கொண்டு இருந்தார். ஆண்டவர் அவரைக் கனப்படுத்தி வேறு ஊருக்கு மாற்றம் கிடைக்கச் செய்தார். பொறுப்புகளில் பொறுமையாய், மனத்தாழ்மையாய், உண்மையாய் இருங்கள். கர்த்தரால் உயர்த்தப்படுவீர்கள்.




சிந்தனை: தன்னைத்தான் தாழ்த்துகிற எவனும் உயர்த்தப்படுவான். கர்த்தருக்குள் உங்களைத் தாழ்த்துங்கள். அவர் உங்களை உயர்த்துவார்.


ஜெபம்: தேவனே நியாயஞ்செய்து இரக்கத்தைச் சிநேகித்து உமக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடக்கப் பெலன் தாரும் . ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்


Counter Stats
newcastle accountants
newcastle accountants Counter

நாடு- தேடாதே

வேதபகுதி:ஆமோஸ் 5:4 - 17


நியாயத்தை எட்டியாக மாற்றி, நீதியைத் தரையில் விழப்பண்ணுகிறவர்களே அவரைத் தேடுங்கள். வசனம் .7




இஸ்ரவேல் ஜனங்கள் பெத்தேலைத் தேடினார்கள். கில்காலில் போய்ச் சேர்ந்தார்கள். அவர்கள் விக்கிரகங்களைத் தேடி ஓடினார்கள். ஆகவே அவர்களைப் பார்த்து ஆமோஸ் தீர்க்கன் கூறுகிறார்; கர்த்தரைத் தேடுங்கள் அப்போது பிழைப்பீர்கள்.



கர்த்தரைத் தேடுவதால் கிடைக்கும் நன்மைகள்
நாளாகமம் 28:9ம் வசனத்தில் கூறப்பட்டிருக்கிறது, நீ அவரைத் தேடினால் அவர் உனக்குத் தென்படுவார். பிரியமானவர்களே ஆயிரம் பதினாயிரம் பேர்களில் சிறந்தவரும், பூரண அழகுள்ளவரும், சாரோனின் ரோஜாவாகுமாகிய தேவன் நமக்குத் தென்படுவது எவ்வளவு பெரிய பாக்கியம். நாம் அவரைத் தேடும் போது அவர் நமக்குத் தென்பட்டு நமக்கு ஆலோசனை தந்து வழி நடத்துவார்.



மத்தேயு 7:7 ல் கூறப்பட்டிருக்கிறது கேளுங்கள் அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த நாட்களில் ஐசுவரியத்தைத் தேடும் படியாக நாமாகவே பலவழிகளைத் தேடி தேவனை மறந்து விடுகிறோம். நாம் தேவனைத் தேடினால் தேவன் நமக்கு வைத்திருக்கும் ஐசுவரியத்தைக் கண்டடையச் செய்வார்.





சிந்தனை: வாலிபனே வசதிகளைத் தேடி ஓடாதே, கர்த்தரைத் தேடு. அவர் ஆசிர்வாதத்தின் கதவுகளை உனக்குத் திறப்பார்..


ஜெபம்: கர்த்தாவே உம்மைத்தேடி உமக்குள் பிழைத்திருக்க உதவி செய்வீராக. ஆமேன்.




தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்


Counter Stats
newcastle accountants
newcastle accountants Counter

சோகக்கதை

வேதபகுதி:ஆமோஸ் 5 :1 - 3


இஸ்ரவேல் தன் தேசத்தில் விழுந்து கிடக்கிறாள். அவளை எடுப்பாரில்லை வசனம் 2



நம்மை நோக்கிக் கடந்து வருகிற பிரச்சினைகளைக் கண்டு சோர்வடைந்து கலங்கி இந்த உலகத்தின் யாத்திரையிலே சோகத்தின் கதாப்பாத்திரங்களாய் மாறும் போது தேவன் நம்மைப் பார்த்து 'நம் சோதனைகளுக்கு மத்தியிலும் தேவன் நம் நடுவே கடந்து வருவேன்' என்று கூறுகிறார்.



யோசுவா 3:5 ல் கூறப்பட்டிருக்கிறது, நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவில் அற்புதங்களைச் செய்வார். நம் சோதனைகளின் மத்தியில் தேவன் அவைகளைப் பார்த்துத் தூர நிற்கிறவரல்ல. நம் நடுவே நின்று நமக்கு உண்டான சோதனையில் தேவன் நமக்கு உதவி செய்ய வல்லவராய் இருக்கிறார்.



எப்போது தேவன் கடந்து வருவார்

நாம் நமது பிரச்சனைகளில் கைகட்டி நிற்கும் போது தேவன் நம்மை நோக்கி கடந்து வருவதில்லை. தேவனும் கைகட்டித்தான் நிற்பார். நாம் நம் கரங்களைக் குவித்து தேவனே எனக்காக இரக்கஞ் செய்யும்படி கடந்து வாரும் என்று அவரை வருந்தியழைக்கும்போது தேவன் இறங்கி வந்து உதவி செய்வார்.




சிந்தனை: உங்களைப் பரிசுத்தம் பண்ணிக் கொள்ளுங்கள் நாளைக்கு கர்த்தர் உங்கள் நடுவே அற்புதங்களைச் செய்வார்.


ஜெபம்: தேவனே என்னில் வந்து அற்புதங்களைச் செய்யும் .ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

இப்படிச் செய்வதே பிரியம்

வேதபகுதி:ஆமோஸ் 4 : 4 - 5


கில்காலுக்கும் போய் துரோகத்தைப் பெருகப்பண்ணி பலிகளையும் தசமபாகங்களையும் செலுத்தி... வசனம் 4.



சிறு பிள்ளைகள் இனிப்புப் பண்டங்களையே அதிகமாக விரும்புகின்றனர். காரமான, புளிப்பான, துவர்ப்பான பொருட்களை வெறுத்துவிடுகின்றனர். சாக்லேட் என்றால் அவர்களுக்குக் கொள்ளைப் பிரியம். அதை உண்டு சிறுவயதிலேயே பற்களில் சொத்தை வந்து இளவயதிலேயே பற்களை இழந்து விடுகிறார்கள்.



இது போன்றே இஸ்ரவேல் மக்கள் தங்களுக்கு விருப்பமான பாவச் செயல்கள் பலவற்றைச் செய்து கொண்டே வந்தார்கள். அது அவர்களை அழிவுக்கு நேராக வழி நடத்திவிடும் என்று தேவன் பல்வேறு தீர்க்கதரிசிகள் மூலமாக எச்சரித்தும் அவர்களுக்கு அதை விட்டுவிட மனதில்லை. ஆகவே தான் ஆண்டவர் சொல்லுகிறார் இப்படிச் செய்வதே இஸ்ரவேலருக்குப் பிரியமாயிருக்கிறது என்று அவர்கள் மனக்கடினத்தினிமித்தம் எச்சரிக்கிறார்.



வாலிபர்கள் பீடி, சிகரெட், மது, பான்பராக், போதைப் பொருட்கள் போன்ற பொருட்களை அந்த பொருட்களின் லேபிளில் " இந்தப் பொருள் உடல் நலத்திற்குக் கேடு " என்றுப் போட்டிருந்தாலும் அவர்கள் அதைப்பிரியமாய்ப் பயன்படுத்துகிறார்கள். இது அவர்களுக்கு அழிவு ஏற்படுத்தும் என்று தெரிந்திருந்தாலும் அதைப் பிரியமாய்ப் பயன்படுத்துகிறார்கள். முடிவில் புற்று நோய் வந்து, நுரையீரல் போன்ற உடல் உறுப்புகள் கெட்டுப் போனபின்பு வருந்துகிறார்கள். அதன் பின்பு ஐயோ போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம்பண்ணிணதே என்று புலம்பவேண்டியதாயிருக்கும்.




நமக்குப் பிரியமானப் பாவப்பழக்கங்கள் போன்ற தீயக் காரியங்களுக்கு யோசேப்பைப் போல விலகி ஒட இன்றைக்கே நாம் தீர்மானம் எடுப்போம். அப்பொழுது கர்த்தர் நம்மை அதிகமாய் ஆசிர்வதிப்பார். நமது எதிர்காலம் மிகவும் ஆசிர்வாதமாக இருக்கும்.




சிந்தனை: பாவம் பூரணமாகும் போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.


ஜெபம்: தேவனே இவ்வுலகத்தின் பாவத்திற்கு விலகி ஓட உம்முடைய தூயக் கிருபையைத் தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

பாசானின் மாடுகள்

வேதபகுதி:ஆமோஸ் 4:1 - 3


சமாரியாவின் மலையிலுள்ள பாசானின் ஆடுகளே, நீங்கள் இந்த வார்த்தையைக் கேளுங்கள். வசனம் 1



குஜராத், பீகார், ஒரிசா போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் காலை, மாலை வேளைகளில் ஆண்களும், பெண்களும், பிள்ளைகளுமாக அவர்கள் காய்ச்சிய சாராயத்தைக் குடித்துக் கொண்டிருப்பார்களாம். சாராயம் காய்ப்பதற்காக அவர்கள் ஒரு வித பூக்களைப் சேகரிக்கப்பதற்காக் குழந்தைகள் செல்வார்களாம். இதை அங்குள்ள மிஷனெரிகள் சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியாக இருந்தது. இன்னும் அங்குள்ள ஆதிவாசி மக்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.



வேதாகமத்தைப் பார்க்கும் போது பழைய எற்பாட்டுக் காலத்தில் இஸ்ரவேலர்களும் இவ்விதமான பாவத்திற்கு அடிமை பட்டு இருந்ததைப் பார்க்க முடிகிறது. அந்நாட்களிலேயே பெண்களும் குடித்து வெறித்திருந்திருக்கிறார்கள். அங்குள்ள வசதி படைத்த பெண்களும் குடித்து வெறித்து ஏழைகளை ஒடுக்கி வந்தனர். ஆண்டவர் அவர்களுக்கு வரும் அழிவையும் நியாயத்தீர்ப்பையும் குறித்து எச்சரிக்கிறார். ஆனால் அவர்களோ மனந்திரும்பாமல் துணிந்து நடந்து வந்தார்கள் . ஆகவே நியாயத்தீர்ப்பு நாளில் ஆண்டவரின் வார்த்தைகளின்படி ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டு இல்பொருளாகிவிட்டனர். ஆண்டவர் அவ்வப்போது நம்மையும் எச்சரிக்கிறார். நாம் அல்லத்தட்டாமல் உடனே மனந்திரும்பி ஆண்டவரை நமது இரட்சகராக ஏற்றுக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் சாலமோன் ராஜா சொல்லியபடி சடுதியிலே நாசமடைவதற்கு ஏதுவாக வேண்டியதிருக்கும்.



இன்றைய நாகரிக காலத்தில் கணினித் துறையில் வேலை பார்க்கும் பெண்களும் கூட மது அருந்துகிறார்கள் என்று செய்தித்தாள்களில் பார்க்கிறோம். இந்தக் கலாச்சாரம் மிகவேகாமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. நாம் எப்படிப் பட்ட நிலைமையில் இருக்கிறோம். சிலரிடம் நீங்கள் ஏன் மது அருந்துகிறீர்கள் என்று கேட்டால், விருந்திற்கு வந்திருந்த அனைவரும் மது அருந்தினார்கள் அவர்களில் நான் மட்டும் தனியாக இருந்தால் நன்றாக இருக்காது அதனால் மது அருந்தொனேன் என்று சோல்லுவார்கள். மது பழக்கத்தினால் நாசமாகிப் போன் அநேகக் குடும்பங்களை நான் கண் கூடாகப் பார்த்திருக்கிறேன். இன்றைக்கே நாம் இப்படிப் பட்ட பாவத்திலிருந்து விடுபடுவோம் இல்லையென்றால் இன்னும் நாம் அழிவின் பாதையில் தான் நின்று கொண்டிருக்கிறோம்.



சிந்தனை: திராட்சரசம் பரியாசஞ்செய்யும்.மதுபானம் அமளிபண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல. நீதிமொழிகள் 20:1

ஜெபம்: கர்த்தாவே உலகத்தாரோடு ஒத்த வேசம் தரியாமல், ஞானமுள்ளவனாய் நடக்க கிருபை புரியும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

தப்புவிப்பது எப்படி?

வேதபகுதி:ஆமோஸ் 3 :12 - 15


இஸ்ரவேல் புத்திரர் ஒரு படுக்கையின் மூலையிலிருந்தும், ஒரு மஞ்சத்தின்மேலிருந்தும் தப்புவிக்கப்படுவார்கள் வசனம். 12



கொலை குற்றம் புரிந்து விட்ட ஜாண் விசாரிக்கப்பட்டு மரணதண்டனை தீர்ப்பை நீதிமன்றத்தில் பெற்றான். பெற்றோரை இழந்த அவனை அவன் அண்ணன் பராமரித்து வந்தான். இறுதியாக ஒரு முறை தம்பியைப் பார்க்க அண்ணன் சென்றான், தம்பி அழுதான். காப்பாற்ற வேண்டினான். அண்ணன் செய்வதறியாது திகைத்தான். இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தான். தனது ஆடைகளைக் களைந்து தனது தம்பியிடம் கொடுத்து தம்பியின் சிறைச்சாலை ஆடைகளை தான் தரித்துக் கொண்டு தூக்கு மரம் சென்று மரித்தான்.



ஆம் நாம் செய்த தவறுகளுக்கு எற்ற தண்டனை மரணமே. யார் தப்புவிப்பது. நம்மால் நம்மை தப்புவித்துக் கொள்ள முடியாதல்லவா? ஆகவே தான் நமதாண்டவர் நமக்காக ஜீவனைக் கொடுத்து நம்மை மீட்டுக் கொண்டார்.



அவராலேயல்லாமல் வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை. நாம் இரட்சிக்கப்படும் படிக்கு வானத்தின் கீழெங்கும் வேறொரு நாமம் கட்டளையிடப்படவில்லை. அப்போஸ்தலர் 4:12. ஆகவே அவரையே நாம் நமது இரட்சகராகக் கொள்ளாவிட்டால் நாம் நமது அழிவைத் தர எதைத்தான் அறுக்க முடியும். நாம் மனந்திரும்பி இன்றே இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளுவோமா?



சிந்தனை: இன்றைக்கே மனந்திரும்பு. இனிக் காலம் செல்லாது. கிறிஸ்துவின் வருகை மிகவும் சமீபமாயிருக்கிறது.

ஜெபம்: தேவனே உம்முடைய இரட்சிப்பின் வழிகளிலே அனுதினமும் நடக்க எனக்கு உதவி புரியும். ஆமேன்



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்