வேதபகுதி:ஆமோஸ் 5 :1 - 3
இஸ்ரவேல் தன் தேசத்தில் விழுந்து கிடக்கிறாள். அவளை எடுப்பாரில்லை வசனம் 2
நம்மை நோக்கிக் கடந்து வருகிற பிரச்சினைகளைக் கண்டு சோர்வடைந்து கலங்கி இந்த உலகத்தின் யாத்திரையிலே சோகத்தின் கதாப்பாத்திரங்களாய் மாறும் போது தேவன் நம்மைப் பார்த்து 'நம் சோதனைகளுக்கு மத்தியிலும் தேவன் நம் நடுவே கடந்து வருவேன்' என்று கூறுகிறார்.
யோசுவா 3:5 ல் கூறப்பட்டிருக்கிறது, நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவில் அற்புதங்களைச் செய்வார். நம் சோதனைகளின் மத்தியில் தேவன் அவைகளைப் பார்த்துத் தூர நிற்கிறவரல்ல. நம் நடுவே நின்று நமக்கு உண்டான சோதனையில் தேவன் நமக்கு உதவி செய்ய வல்லவராய் இருக்கிறார்.
எப்போது தேவன் கடந்து வருவார்
நாம் நமது பிரச்சனைகளில் கைகட்டி நிற்கும் போது தேவன் நம்மை நோக்கி கடந்து வருவதில்லை. தேவனும் கைகட்டித்தான் நிற்பார். நாம் நம் கரங்களைக் குவித்து தேவனே எனக்காக இரக்கஞ் செய்யும்படி கடந்து வாரும் என்று அவரை வருந்தியழைக்கும்போது தேவன் இறங்கி வந்து உதவி செய்வார்.
சிந்தனை: உங்களைப் பரிசுத்தம் பண்ணிக் கொள்ளுங்கள் நாளைக்கு கர்த்தர் உங்கள் நடுவே அற்புதங்களைச் செய்வார்.
ஜெபம்: தேவனே என்னில் வந்து அற்புதங்களைச் செய்யும் .ஆமேன்.
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்
0 comments:
கருத்துரையிடுக