மதியம் திங்கள், 5 நவம்பர், 2007

பாசானின் மாடுகள்

வேதபகுதி:ஆமோஸ் 4:1 - 3


சமாரியாவின் மலையிலுள்ள பாசானின் ஆடுகளே, நீங்கள் இந்த வார்த்தையைக் கேளுங்கள். வசனம் 1



குஜராத், பீகார், ஒரிசா போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் காலை, மாலை வேளைகளில் ஆண்களும், பெண்களும், பிள்ளைகளுமாக அவர்கள் காய்ச்சிய சாராயத்தைக் குடித்துக் கொண்டிருப்பார்களாம். சாராயம் காய்ப்பதற்காக அவர்கள் ஒரு வித பூக்களைப் சேகரிக்கப்பதற்காக் குழந்தைகள் செல்வார்களாம். இதை அங்குள்ள மிஷனெரிகள் சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியாக இருந்தது. இன்னும் அங்குள்ள ஆதிவாசி மக்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.



வேதாகமத்தைப் பார்க்கும் போது பழைய எற்பாட்டுக் காலத்தில் இஸ்ரவேலர்களும் இவ்விதமான பாவத்திற்கு அடிமை பட்டு இருந்ததைப் பார்க்க முடிகிறது. அந்நாட்களிலேயே பெண்களும் குடித்து வெறித்திருந்திருக்கிறார்கள். அங்குள்ள வசதி படைத்த பெண்களும் குடித்து வெறித்து ஏழைகளை ஒடுக்கி வந்தனர். ஆண்டவர் அவர்களுக்கு வரும் அழிவையும் நியாயத்தீர்ப்பையும் குறித்து எச்சரிக்கிறார். ஆனால் அவர்களோ மனந்திரும்பாமல் துணிந்து நடந்து வந்தார்கள் . ஆகவே நியாயத்தீர்ப்பு நாளில் ஆண்டவரின் வார்த்தைகளின்படி ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டு இல்பொருளாகிவிட்டனர். ஆண்டவர் அவ்வப்போது நம்மையும் எச்சரிக்கிறார். நாம் அல்லத்தட்டாமல் உடனே மனந்திரும்பி ஆண்டவரை நமது இரட்சகராக ஏற்றுக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் சாலமோன் ராஜா சொல்லியபடி சடுதியிலே நாசமடைவதற்கு ஏதுவாக வேண்டியதிருக்கும்.



இன்றைய நாகரிக காலத்தில் கணினித் துறையில் வேலை பார்க்கும் பெண்களும் கூட மது அருந்துகிறார்கள் என்று செய்தித்தாள்களில் பார்க்கிறோம். இந்தக் கலாச்சாரம் மிகவேகாமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. நாம் எப்படிப் பட்ட நிலைமையில் இருக்கிறோம். சிலரிடம் நீங்கள் ஏன் மது அருந்துகிறீர்கள் என்று கேட்டால், விருந்திற்கு வந்திருந்த அனைவரும் மது அருந்தினார்கள் அவர்களில் நான் மட்டும் தனியாக இருந்தால் நன்றாக இருக்காது அதனால் மது அருந்தொனேன் என்று சோல்லுவார்கள். மது பழக்கத்தினால் நாசமாகிப் போன் அநேகக் குடும்பங்களை நான் கண் கூடாகப் பார்த்திருக்கிறேன். இன்றைக்கே நாம் இப்படிப் பட்ட பாவத்திலிருந்து விடுபடுவோம் இல்லையென்றால் இன்னும் நாம் அழிவின் பாதையில் தான் நின்று கொண்டிருக்கிறோம்.



சிந்தனை: திராட்சரசம் பரியாசஞ்செய்யும்.மதுபானம் அமளிபண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல. நீதிமொழிகள் 20:1

ஜெபம்: கர்த்தாவே உலகத்தாரோடு ஒத்த வேசம் தரியாமல், ஞானமுள்ளவனாய் நடக்க கிருபை புரியும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்