வேதபகுதி:ஆமோஸ் 3 :12 - 15
இஸ்ரவேல் புத்திரர் ஒரு படுக்கையின் மூலையிலிருந்தும், ஒரு மஞ்சத்தின்மேலிருந்தும் தப்புவிக்கப்படுவார்கள் வசனம். 12
கொலை குற்றம் புரிந்து விட்ட ஜாண் விசாரிக்கப்பட்டு மரணதண்டனை தீர்ப்பை நீதிமன்றத்தில் பெற்றான். பெற்றோரை இழந்த அவனை அவன் அண்ணன் பராமரித்து வந்தான். இறுதியாக ஒரு முறை தம்பியைப் பார்க்க அண்ணன் சென்றான், தம்பி அழுதான். காப்பாற்ற வேண்டினான். அண்ணன் செய்வதறியாது திகைத்தான். இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தான். தனது ஆடைகளைக் களைந்து தனது தம்பியிடம் கொடுத்து தம்பியின் சிறைச்சாலை ஆடைகளை தான் தரித்துக் கொண்டு தூக்கு மரம் சென்று மரித்தான்.
ஆம் நாம் செய்த தவறுகளுக்கு எற்ற தண்டனை மரணமே. யார் தப்புவிப்பது. நம்மால் நம்மை தப்புவித்துக் கொள்ள முடியாதல்லவா? ஆகவே தான் நமதாண்டவர் நமக்காக ஜீவனைக் கொடுத்து நம்மை மீட்டுக் கொண்டார்.
அவராலேயல்லாமல் வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை. நாம் இரட்சிக்கப்படும் படிக்கு வானத்தின் கீழெங்கும் வேறொரு நாமம் கட்டளையிடப்படவில்லை. அப்போஸ்தலர் 4:12. ஆகவே அவரையே நாம் நமது இரட்சகராகக் கொள்ளாவிட்டால் நாம் நமது அழிவைத் தர எதைத்தான் அறுக்க முடியும். நாம் மனந்திரும்பி இன்றே இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளுவோமா?
சிந்தனை: இன்றைக்கே மனந்திரும்பு. இனிக் காலம் செல்லாது. கிறிஸ்துவின் வருகை மிகவும் சமீபமாயிருக்கிறது.
ஜெபம்: தேவனே உம்முடைய இரட்சிப்பின் வழிகளிலே அனுதினமும் நடக்க எனக்கு உதவி புரியும். ஆமேன்
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்
0 comments:
கருத்துரையிடுக