மதியம் சனி, 10 நவம்பர், 2007

நாடு- தேடாதே

வேதபகுதி:ஆமோஸ் 5:4 - 17


நியாயத்தை எட்டியாக மாற்றி, நீதியைத் தரையில் விழப்பண்ணுகிறவர்களே அவரைத் தேடுங்கள். வசனம் .7




இஸ்ரவேல் ஜனங்கள் பெத்தேலைத் தேடினார்கள். கில்காலில் போய்ச் சேர்ந்தார்கள். அவர்கள் விக்கிரகங்களைத் தேடி ஓடினார்கள். ஆகவே அவர்களைப் பார்த்து ஆமோஸ் தீர்க்கன் கூறுகிறார்; கர்த்தரைத் தேடுங்கள் அப்போது பிழைப்பீர்கள்.



கர்த்தரைத் தேடுவதால் கிடைக்கும் நன்மைகள்
நாளாகமம் 28:9ம் வசனத்தில் கூறப்பட்டிருக்கிறது, நீ அவரைத் தேடினால் அவர் உனக்குத் தென்படுவார். பிரியமானவர்களே ஆயிரம் பதினாயிரம் பேர்களில் சிறந்தவரும், பூரண அழகுள்ளவரும், சாரோனின் ரோஜாவாகுமாகிய தேவன் நமக்குத் தென்படுவது எவ்வளவு பெரிய பாக்கியம். நாம் அவரைத் தேடும் போது அவர் நமக்குத் தென்பட்டு நமக்கு ஆலோசனை தந்து வழி நடத்துவார்.



மத்தேயு 7:7 ல் கூறப்பட்டிருக்கிறது கேளுங்கள் அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த நாட்களில் ஐசுவரியத்தைத் தேடும் படியாக நாமாகவே பலவழிகளைத் தேடி தேவனை மறந்து விடுகிறோம். நாம் தேவனைத் தேடினால் தேவன் நமக்கு வைத்திருக்கும் ஐசுவரியத்தைக் கண்டடையச் செய்வார்.





சிந்தனை: வாலிபனே வசதிகளைத் தேடி ஓடாதே, கர்த்தரைத் தேடு. அவர் ஆசிர்வாதத்தின் கதவுகளை உனக்குத் திறப்பார்..


ஜெபம்: கர்த்தாவே உம்மைத்தேடி உமக்குள் பிழைத்திருக்க உதவி செய்வீராக. ஆமேன்.




தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்


Counter Stats
newcastle accountants
newcastle accountants Counter