சொன்னதைச் செய்யும் தேவன்

"கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று." யோசுவா 21:45

கர்த்தராகிய தேவன் ஆபிரகாமோடே நான் கானான் தேசத்தை உன்னுடைய சந்ததிக்குத் தருவேன் என்று வாக்கு பண்ணினார். அந்த வாக்குத்தத்தம் சுமார் 700 ஆண்டுகளுக்குப் பின்பாக நிறைவேறியது. ஆண்டவர் சொன்ன வாக்குத்தத்தங்கள் எல்லாம் நிறைவேறிற்று. ஆண்டவர் நம்முடைய வாழ்விலும் பல்வேறு வாக்குத்ததங்களைத் தருகின்றார் ஆனால் அவைகள் நிறைவேறுவதும் நிறைவேறாமல் போவதும் நம்முடைய நல்நடக்கைகளில் தான் உள்ளது. வாக்குத்தத்தங்களை ஆண்டவர் கீழ்க்கண்டவாறு நிறைவேற்றுகின்றார்.

1.உடனடியாக கிடைக்கும் ஆசீர்வாதம்:
கர்த்தர் நோவாவை நோக்கி நான் பூமியை அழிக்கப் போகின்றேன் உன்னையும் உன் சந்ததியையும் காப்பதற்காகப் பேழையைக் கட்டு என்றுக் கூறினார். நோவா ஆண்டவரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்ததினால் உலகத்தின் அழிவினிற்று அவனும் அவனுடையக் குடும்பமும் காக்கப்படுகின்ற்றது. நோவாவின் சந்ததியினால் பூமியில் வம்சங்கள் உண்டாயின.

2. தாமதமாகக் கிடைக்கும் ஆசீர்வாதம்:
கர்த்தர் ஆபிரகாமோடே வாக்குத்தத்தம்பண்ணி நீ கால்மிதிக்கும் தேசத்தையெல்லாம் உன் சந்ததிக்குச் சுதந்திரமாகத் தருவேன் அவர்கள் 400 வருடங்கள் அந்நிய தேசத்திலே அடிமைகளாக இருப்பார்கள். அதன்பின்பு கானான் தேசாத்தைச் சுதந்தரிப்பார்கள் என்று சொன்னார். எகிப்து தேசத்திலே ஆண்டவரை மறந்து சேவித்து உபத்திரவத்தின் போது ஆண்டவரைத் தேடினார்கள் ஆண்டவர் ஆபிரகாமுக்குச் சொன்ன வாக்குத்ததை நினைத்து மோசேயை அனுப்பினார். பின்னும் பிரயாணங்களிலே ஆண்டவரைக் கோபப்படுத்தினதினால் மேலும் நாற்பது ஆஅண்டுகாலம் தாமதமாக கானானைச் சுதந்தரித்தார்கள்.


3.குறைவுபட்டுக் கிடைக்கும் ஆசீர்வாதம்:
சில வேளைகளிம் நாம் செய்யும் பாவங்கள் ஆண்டவர் வாக்குப்பண்ணின ஆசீர்வாதங்களைக் குறைவுபட வைக்க்கின்றது. தாவீதுக்கு ஆண்டவர் வாக்குப்பண்ணி உன் சந்ததியார் என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆள்வார்கள், சவுலை விட்டு நான் ராஜ்யபாரத்தை எடுத்தது போல உன் சந்ததியை விட்டு  விலக்கமாட்டேன் என்று கூறினார். ஆனால் சாலமோன் அந்நிய தெய்வங்களைப் பின்பற்றிச் சோரம் போனதினால் அவனுடையக் காலாத்திற்குப் பின்பு 12 கோத்திரங்களில் 1.5 கோத்திரங்களை மாத்திரம் மட்டும் ஆளுகின்ற ஆசீர்வாதக் குறைவு ஏற்பட்டது.

4.நிராகரிக்கப்படும் ஆசீர்வாதம்
ஆண்டவருக்குப் பிரியமில்லாத காரியங்களைச் செய்து தவறு என்று உணர்ந்து குணப்படாமல் துன்மார்க்க வழியை விட்டு மனந்திரும்பாமல் நடக்கின்ற போது ஆண்டவர் வாக்குத்தத்தம் பண்ணின ஆசீர்வாதங்கள் நிராகரிக்கப்படுகின்றது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஊழியம் செய்யும் போது தம்முடைய சீடர்களிடம் நீங்கள் மறுமையின் ராஜ்ஜியத்தில் இஸ்வேலின் கோத்திரங்களை நியாயம் விசாரிப்பீர்களென்று வாக்குப் பண்ணினார். ஆனால் யூதாஸ்காரியோத்து ஆண்டவராகிய இயேசுவைக் காட்டிக் கொடுத்து மனம் திரும்பாமல் நாண்டுகொண்டு மரித்ததினால் பரலோடகத்திற்கு செல்லும் பாக்கியத்தையே இழந்துப் போனான்.

பேதுரு ஆண்டவரை மறுதலித்தபோதும் மனம்திரும்பி மன்னிப்பைப் பெற்றுக் கொண்டான். அதோடு கூட பரலோகராஜ்ஜியத்தில் நியாயம் விசாரிக்கக் கூடிய பாக்கியத்தைப் பெற்றுக் கொண்டான்.

சிந்தனை: ஆண்டவர் வாக்குப்பண்ணினதை நிறைவேற்ற நம்மில் குறைகள் காணப்படுகின்றதா?

ஜெபம் : அன்பின் ஆண்டவரே, என்னிலுள்ள பாவங்கள் அக்கிரமங்கள் எல்லாவற்றையும் மன்னித்து நீர் எங்களுக்கு வாக்குப்பண்ணின்ஆசீர்வாதங்களைச் சுதந்தரித்துக் கொள்ள எங்களைத் தகுதிப்படுத்திப் பரிசுத்தப்படுத்தி ஆசீர்வதித்து உம்முடைய நன்மையினால் நிரப்பியருளும்.ஆமேன்