பெலிஸ்தியாவுக்குத் தண்டனை

வேதபகுதி:ஆமோஸ் 1:6 - 8


பெலிஸ்தரில் மீதியானவர்கள் அழியும்படிக்கு என் கையை எக்ரோனுக்கு விரோதமாகத் திருப்புவேன். வசனம் 8



பெலிஸ்தியர் குடியிருந்த தேசமானதால் பெலிஸ்தியா எனப்பட்டது. பிற்காலங்களில் கானானியரும் மோவாபியரும் அங்கேயிருந்தார்கள். எபிரேயர் அவர்களைத் துரத்திவிட்டு அங்கே குடியேறினார்கள்.பெலிஸ்தர்கள் செய்த அக்கிரமங்களினிமித்தம் தேவன் அவர்களை அழிப்பேன் என்று ஆமோஸ் தீர்க்கதரிசியிடம் தேவன் உறைக்கிறார்.



இஸ்ரவேலரை தேவன் மீட்டுக் கொண்டதினிமித்தம்( யாத்திராகமம்15:14) பெலிஸ்தியரைத் திகில் பிடிக்கும்(ஏசாயா 14:29). முழு பெலிஸ்தியாவே உன்னை அடித்தகோல் முறிந்ததென்று அக்களிப்பாயிராதே. பாம்பின் வேரிலிருந்து கட்டு விரியன் தோன்றும், அதின் கனி பறக்கிற அக்கினி சர்ப்பமாயிருக்க்கும்.



சிலந்திப் பூச்சி வலையைப் போல சாத்தான் அநேக வலைகளை விரித்து வைத்திருக்கிறான். சிலந்திப் பூச்சியின் வலையில் சிக்கும் பூச்சிகளை அந்த சிலந்தி தன் கால்களால் அன்போடு இழுக்கிறது போல இரத்தத்தை உறிஞ்சி தொங்க விட்டுவிட்டு சென்று விடுகிறது.



சிந்தனை: பாவச் செயல்களை உன் வாழ்வில் கூடுகட்ட விடாதே.


ஜெபம்: கர்த்தாவே, பாவத்திற்கு எதிர்த்துப் போராடக் கிருபை தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

பாவமும் தண்டனையும்

வேதபகுதி:ஆமோஸ் 1:3 - 5


தமஸ்குவினுடைய... ஆக்கினையத் திருப்பமாட்டேன். வசனம் 3



நூறு வருடங்களாய் தமஸ்குவுக்கும் இஸ்ரவேலுக்கும் இடையில் யுத்தம் நடந்தது. தமஸ்குவில் இருந்த இராஜாக்களில் பெனாதாத் பேர்பெற்றவன். ஆகாப் இராஜாவின் நாட்களில் அவன் இஸ்ரவேலரை நெருக்கினான்.



தமஸ்கு தளர்ந்துபோம், புறங்காட்டி ஓடிப்போம், திகில் அதைப் பிடித்தது. பிரசவ ஸ்திரியைப் போல இடுக்கமும், வேதனைகளும் அதைப் பிடித்தது. சந்தோஷமான அந்தப் புகழ்ச்சியுள்ள நகரம் தப்பிவிடப்படாமற்போயிற்றே. ஆதலால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுந்து யுத்த மனுஷர் எல்லாரும் அந்நாளிலே சங்காரமானார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். தமஸ்குவின் மதில்களில் தீக்கொளுத்துவேன், அது பெனாதாத்தின் அரமனைகளைப் பட்சிக்கும் என்கிறார் (எரேமியா 47:24- 27).



கீலேயாத் அக்கிரமம் செய்கிறவர்களின் பட்டணம் என்று சொல்லி, கர்த்தரிடம் திரும்பும்படி ஓசியா கூறுகிறார். ஆசகேல் தன் முன்னிருந்தவனைக் கொன்று தான் பட்டம் சூட்டினவன். எனவே அவன் வீட்டில் தீக்கொளுத்துவேன் என்கிறார் தேவன் (ஓசியா 6:8).



அப்போஸ்தலனாகிய பவுலின் குணப்படுதல் தமஸ்குவுக்குச் சமீபமாய்ச் சமீபித்தது. பின்பு அவன் தமஸ்குவுக்குக் கொண்டு போகப்பட்டு, பார்வை அடைந்து, ஞானஸ்நானம் பெற்று ஆலயங்களில் பிரசங்கிக்க உதவியது.



சிந்தனை: தேவனின் கடிந்து கொள்ளுதலை அசட்டை செய்யாதே.


ஜெபம்: தேவனே உம்முடைய கடிந்து கொள்ளுதலை எற்று நடக்க உதவி புரியும்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

நான் யார்?

வேதபகுதி:ஆமோஸ் 1:1 - 2


தெக்கோவா ஊர் மேய்ப்பருக்குள் இருந்த ஆமோஸ். வசனம் 1



ஆமோஸ், யூதேயா நாட்டைச் சேர்ந்த தெக்கோவா ஊரிலுள்ளவன். குடும்பம் எளிமையானது. அவனுடைய ஆஸ்தி ஒரு சிறு மந்தையும் சில காட்டத்தி மரங்களுமே. தன் ஆடுகளை மலையோரங்களில் மேய்ப்பதும், காட்டத்திப் பழங்களைப் பொறுக்கி விற்பதுமே அவனது தொழில்.



ஆமோஸ் என்னும் பதத்துக்குப் பாரம் என்பது பொருள். அதிக பாரத்தோடு தன் ஊழியத்தை நிறைவேற்றிய ஒரு தீர்க்கதரிசி. தேவசத்தத்தைத் தெளிவாய்க் கேட்டதினாலேயே அவ்விதமான பாரம் ஏற்பட்டது. தேவனுடைய அழைப்பைப் பெற்றபோது, தனக்குள்ள யாவற்றையும் விட்டு ஆண்டவருடைய சேவையைச் செய்ய தன்னை ஆயத்தப்படுத்தினான். குருவியைப் பிடிப்பது போல ஆண்டவர் அவனைத் தன் கையில் பிடித்தார் (ஆமோஸ் 3:5). தன் உள்ளத்திலிருந்த செய்திகளை அவனுக்குத் தேவன் தெரியப்படுத்தினார் (3:7). அவனும் தேவனும் ஒருமித்து நடந்தார்கள் (3:3). சாதாரண தொழில், உபதேசமுறை, சத்துருக்களின் வீண்பக்தி, கடமையைக் குறித்த பாரம் இவைகளைப் பார்க்கும் போது பல விசயங்களில் இவர் இயேசுவைப் போன்றவர் எனத் தெரிகிறது. தேவ வசனம் அவனை உயிர்ப்பித்து ஏவி எழுப்பியதால் தேவனுடைய வார்த்தைகள் சிங்கம் கர்ஜிப்பது போல் இருந்தது (3:4).



D.L.மூடி என்ற பக்தனும் துவக்கத்தில் ஞாயிறு பாடசாலை ஊழியத்தைச் செய்தவர் தான். எதிர் காலத்தில் ஐரோப்பா கண்டத்தை ஒரு கையிலும், அமெரிக்காவை ஒரு கையிலும் ஜெபத்தில் எந்தி நின்று தேவனை மகிமைப்படுத்தினவராக உயர்ந்தார்.



சிந்தனை: அழைப்பை உதாசினம் செய்யாதே.


ஜெபம்: ஆண்டவரே, தீர்க்கர்களை எங்களுக்குள்ளே எழுப்பியருளும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

வற்றாக் கிருபை நதியே

வேதபகுதி:மீகா 7:20


தேவரீர் பூர்வநாட்கள்முதல் எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட சத்தியத்தை யாக்கோபுக்கும், கிருபையை ஆபிரகாமுக்கும் கட்டளையிடுவாராக.



ஆண்டவரின் ஆராய்ந்து முடியாத, அளவிடமுடியாத ஒரு குணம் அவருடைய கிருபை தான். கிருபை மனிதனால் காட்டமுடியாது. கிருபை என்பது அருகதையில்லாத, வக்கில்லாத, இழிவான நிலையிலிருக்கும் ஒருவருக்கு கிடைக்கும் ஆண்டவரின் மாறாத கொடை. எபேசியர் 2:8ல் கிருபையினால் இரட்சிப்பு என்று சொல்லப்படுகிறது. பவுல் சொல்லுகிறார், நான் இருக்கிறது தேவனுடைய சுத்த கிருபை என்று சொல்லுகிறார். மேலும் தம்முடைய கிருபயினால் என்னை அழைத்த தேவன் என்றும் கூறுகிறார். ஊழியமே தேவனால் விசுவாசிகளுக்கு கொடுக்கப்பட்ட கிருபை என்று சொல்லுகிறார் (எபேசியர் 3:2,7,8,11). கிருபையின் காலம் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த உலக வாழ்வில் நானும், எனக்கென்று இருக்கின்ற எல்லாமே ஆண்டவரால் மட்டும் என்ற உணர்வுடன் வாழ வேண்டும்.



இவ்வசனத்தில் ஆண்டவர் சத்தியத்தை யாக்கோபுக்கும், கிருபையை ஆபிரகாமுக்கும் கட்டளையிடுகிறார். ஏன் தெரியுமா? யாக்கோபுக்குத் தேவை உண்மை, சத்தியம். ஆபிரகாமுக்குத் தேவை கிருபை. அன்பு சகோதரனே, சகோதரியே ஒருவேளை நீங்கள் ஏமாற்றுபவராக, பொய் சொல்லுபவராக இருந்தால் ஆண்டவர் தமது சத்தியத்தைத் தருகிறார் அல்லது விசுவாசத்தோடு வாழ்பவராக இருந்தால் தமது கிருபையைத் தர வல்லவராயிருக்கிறார்.



சிந்தனை: துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்து கொள்ளும். சங்கீதம் 32:10


ஜெபம்: வற்றாத கிருபை நதியே, உமது கிருபையை விசுவாசத்தால் பெற்றுக் கொள்ள எங்களுக்கு உதவி செய்யும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

சமுத்திரத்தின் ஆழம்

வேதபகுதி:மீகா 7:19

அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.





கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே உங்கள் பாவத்தை அறிக்கையிட்டு, மனந்திரும்பி ஆண்டவருக்கு உங்கள் வாழ்க்கையை ஒப்புக் கொடுத்து விட்டீர்களா? 1 யோவான் 1 :9ன் படி நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு தேவன் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். பாவத்தை மன்னிக்கிறார், பாவத்தை நீக்குகிறார், நம்மைப் பரிசுத்தமாக்குகிறார். ஏசாயா 43:25, ஏசாயா 38:17ன் படி பாவங்களை குலைத்துப் போட்டு மறந்து விடுகிறவர், மற்றும் முதுகுக்குப் பின்னாக எறிந்துவிடுபவர்.



ஆனால் நாமோ சில நேரங்களில் சிறு பிராயத்தில் அல்லது வாலிபப் பிராயத்தில் அல்லது மாறுபட்ட சூழ்நிலைகளில் செய்த பழைய பாவங்களை நினைத்து குற்ற மனசாட்சி அடைந்து சமாதானத்தை இழந்து போகிற சூழ்நிலைகளுக்குச் சாத்தானால் தள்ளப்படுகிறோம். நமது பாவங்களைத் தேவன் பார்க்கக் கூடாத, போகமுடியாத தூரமான இடத்தில் சமுத்திர ஆழத்தில் போட்டபின் நாம் ஏன் மீண்டும் மீண்டும் கிளறிப் பார்க்கிறோம்?. நம்முடைய தேவன் மன்னித்தவுடனே மறந்து விடுகிறார். நாம் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறோம்.



சிந்தனை: குற்றங்களையெல்லாம் மன்னிக்கிறார், நோய்களை குணமாக்கி நடத்துகிறார். அவர் செய்த சகல உபகாரங்களை நீ ஒரு நாளும் மறவாதே. ஒருபோதும் மறவாதே.


ஜெபம்: பாவத்தைப் பாராத சுத்தக்கண்ணரே, என் பாவங்களை அகற்றி, பாவியாகிய என் மேல் கிருபையாயிரும்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

மன்னிப்பதில் வல்லவர்

வேதபகுதி:மீகா 7:18

தமது சுதந்திரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபை செய்ய விருப்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.





பாவம் செய்கிற பிறவிகுணம் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. ஆகவேதான் தாவீது சொல்லுகிறார் நான் துர்குண்த்தில் உருவானேன். என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பம் தரித்தாள். சங்கீதம் 51:5



பாவம் செய்கிற மனுக்குலம், குறுகுறுக்கும் குற்ற மனசாட்சியிலிருந்து விடுபட பரிகாரம் தேடுகிறது. புண்ணியம், பலி, தானதர்மம் மூலமாகத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆண்டவர் ஒருவரே பாவங்களை மன்னிக்கிறவராக இருக்கிறார். மன்னிக்கிறதற்கு தயை பெருத்தவர் நமதாண்டவர். பாவங்களை மன்னிக்கிறதற்கு மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்று இயேசு சொன்னார். பாவங்களை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவர்களுக்கு இரக்கம் செய்கிறவராக இருக்கிறார். மனிதன் சகவிசுவாசியை மன்னித்து விட்டேன் என்பான், மறக்கமாட்டான். எப்படியென்றால் நாம் ஜெராக்ஸ் காப்பியைக் கிழித்துவிட்டு ஒரிஜினல் காப்பியை வைத்துக் கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம். மன்னிப்பதென்பது நம்மைப் பொறுத்தவரை பெயரளவில் மட்டுமேயுள்ளது. ஆண்டவர் மன்னிக்கிறவர் மாத்திரம் அல்ல், மறந்துவிடுகிறவருங்கூட. சமுத்திரத்தின் ஆழத்தில் எரிந்துவிடுகிறார். கடவுள் போல மன்னிக்கிற குணம் பெற்ற மனிதன் யாருமில்லை. சகோதர சகோதரியே உனக்கு மன்னிப்பு கிடைத்துள்ளதா? உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் பஞ்சைப் போல வெண்மையாகும்.



சிந்தனை: மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார். சங்கீதம் 103:12


ஜெபம்: மன்னிப்பின் மைந்தனே, பாவ மன்னிப்பின் நிச்சயத்தை எனக்குத் தாரும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்