வேதபகுதி:ஆமோஸ் 1:3 - 5
தமஸ்குவினுடைய... ஆக்கினையத் திருப்பமாட்டேன். வசனம் 3
நூறு வருடங்களாய் தமஸ்குவுக்கும் இஸ்ரவேலுக்கும் இடையில் யுத்தம் நடந்தது. தமஸ்குவில் இருந்த இராஜாக்களில் பெனாதாத் பேர்பெற்றவன். ஆகாப் இராஜாவின் நாட்களில் அவன் இஸ்ரவேலரை நெருக்கினான்.
தமஸ்கு தளர்ந்துபோம், புறங்காட்டி ஓடிப்போம், திகில் அதைப் பிடித்தது. பிரசவ ஸ்திரியைப் போல இடுக்கமும், வேதனைகளும் அதைப் பிடித்தது. சந்தோஷமான அந்தப் புகழ்ச்சியுள்ள நகரம் தப்பிவிடப்படாமற்போயிற்றே. ஆதலால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுந்து யுத்த மனுஷர் எல்லாரும் அந்நாளிலே சங்காரமானார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். தமஸ்குவின் மதில்களில் தீக்கொளுத்துவேன், அது பெனாதாத்தின் அரமனைகளைப் பட்சிக்கும் என்கிறார் (எரேமியா 47:24- 27).
கீலேயாத் அக்கிரமம் செய்கிறவர்களின் பட்டணம் என்று சொல்லி, கர்த்தரிடம் திரும்பும்படி ஓசியா கூறுகிறார். ஆசகேல் தன் முன்னிருந்தவனைக் கொன்று தான் பட்டம் சூட்டினவன். எனவே அவன் வீட்டில் தீக்கொளுத்துவேன் என்கிறார் தேவன் (ஓசியா 6:8).
அப்போஸ்தலனாகிய பவுலின் குணப்படுதல் தமஸ்குவுக்குச் சமீபமாய்ச் சமீபித்தது. பின்பு அவன் தமஸ்குவுக்குக் கொண்டு போகப்பட்டு, பார்வை அடைந்து, ஞானஸ்நானம் பெற்று ஆலயங்களில் பிரசங்கிக்க உதவியது.
சிந்தனை: தேவனின் கடிந்து கொள்ளுதலை அசட்டை செய்யாதே.
ஜெபம்: தேவனே உம்முடைய கடிந்து கொள்ளுதலை எற்று நடக்க உதவி புரியும்.
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்
0 comments:
கருத்துரையிடுக