மதியம் வியாழன், 25 அக்டோபர், 2007

நான் யார்?

வேதபகுதி:ஆமோஸ் 1:1 - 2


தெக்கோவா ஊர் மேய்ப்பருக்குள் இருந்த ஆமோஸ். வசனம் 1



ஆமோஸ், யூதேயா நாட்டைச் சேர்ந்த தெக்கோவா ஊரிலுள்ளவன். குடும்பம் எளிமையானது. அவனுடைய ஆஸ்தி ஒரு சிறு மந்தையும் சில காட்டத்தி மரங்களுமே. தன் ஆடுகளை மலையோரங்களில் மேய்ப்பதும், காட்டத்திப் பழங்களைப் பொறுக்கி விற்பதுமே அவனது தொழில்.



ஆமோஸ் என்னும் பதத்துக்குப் பாரம் என்பது பொருள். அதிக பாரத்தோடு தன் ஊழியத்தை நிறைவேற்றிய ஒரு தீர்க்கதரிசி. தேவசத்தத்தைத் தெளிவாய்க் கேட்டதினாலேயே அவ்விதமான பாரம் ஏற்பட்டது. தேவனுடைய அழைப்பைப் பெற்றபோது, தனக்குள்ள யாவற்றையும் விட்டு ஆண்டவருடைய சேவையைச் செய்ய தன்னை ஆயத்தப்படுத்தினான். குருவியைப் பிடிப்பது போல ஆண்டவர் அவனைத் தன் கையில் பிடித்தார் (ஆமோஸ் 3:5). தன் உள்ளத்திலிருந்த செய்திகளை அவனுக்குத் தேவன் தெரியப்படுத்தினார் (3:7). அவனும் தேவனும் ஒருமித்து நடந்தார்கள் (3:3). சாதாரண தொழில், உபதேசமுறை, சத்துருக்களின் வீண்பக்தி, கடமையைக் குறித்த பாரம் இவைகளைப் பார்க்கும் போது பல விசயங்களில் இவர் இயேசுவைப் போன்றவர் எனத் தெரிகிறது. தேவ வசனம் அவனை உயிர்ப்பித்து ஏவி எழுப்பியதால் தேவனுடைய வார்த்தைகள் சிங்கம் கர்ஜிப்பது போல் இருந்தது (3:4).



D.L.மூடி என்ற பக்தனும் துவக்கத்தில் ஞாயிறு பாடசாலை ஊழியத்தைச் செய்தவர் தான். எதிர் காலத்தில் ஐரோப்பா கண்டத்தை ஒரு கையிலும், அமெரிக்காவை ஒரு கையிலும் ஜெபத்தில் எந்தி நின்று தேவனை மகிமைப்படுத்தினவராக உயர்ந்தார்.



சிந்தனை: அழைப்பை உதாசினம் செய்யாதே.


ஜெபம்: ஆண்டவரே, தீர்க்கர்களை எங்களுக்குள்ளே எழுப்பியருளும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்