மதியம் திங்கள், 22 அக்டோபர், 2007

மன்னிப்பதில் வல்லவர்

வேதபகுதி:மீகா 7:18

தமது சுதந்திரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபை செய்ய விருப்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.





பாவம் செய்கிற பிறவிகுணம் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. ஆகவேதான் தாவீது சொல்லுகிறார் நான் துர்குண்த்தில் உருவானேன். என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பம் தரித்தாள். சங்கீதம் 51:5



பாவம் செய்கிற மனுக்குலம், குறுகுறுக்கும் குற்ற மனசாட்சியிலிருந்து விடுபட பரிகாரம் தேடுகிறது. புண்ணியம், பலி, தானதர்மம் மூலமாகத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆண்டவர் ஒருவரே பாவங்களை மன்னிக்கிறவராக இருக்கிறார். மன்னிக்கிறதற்கு தயை பெருத்தவர் நமதாண்டவர். பாவங்களை மன்னிக்கிறதற்கு மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்று இயேசு சொன்னார். பாவங்களை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவர்களுக்கு இரக்கம் செய்கிறவராக இருக்கிறார். மனிதன் சகவிசுவாசியை மன்னித்து விட்டேன் என்பான், மறக்கமாட்டான். எப்படியென்றால் நாம் ஜெராக்ஸ் காப்பியைக் கிழித்துவிட்டு ஒரிஜினல் காப்பியை வைத்துக் கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம். மன்னிப்பதென்பது நம்மைப் பொறுத்தவரை பெயரளவில் மட்டுமேயுள்ளது. ஆண்டவர் மன்னிக்கிறவர் மாத்திரம் அல்ல், மறந்துவிடுகிறவருங்கூட. சமுத்திரத்தின் ஆழத்தில் எரிந்துவிடுகிறார். கடவுள் போல மன்னிக்கிற குணம் பெற்ற மனிதன் யாருமில்லை. சகோதர சகோதரியே உனக்கு மன்னிப்பு கிடைத்துள்ளதா? உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் பஞ்சைப் போல வெண்மையாகும்.



சிந்தனை: மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார். சங்கீதம் 103:12


ஜெபம்: மன்னிப்பின் மைந்தனே, பாவ மன்னிப்பின் நிச்சயத்தை எனக்குத் தாரும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்