மதியம் வெள்ளி, 19 அக்டோபர், 2007

சத்துரு தலைகுனிவான்

வேதபகுதி:மீகா 7:10

உன் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று என்னோடே சொல்லுகிற என் சத்துருவானவன் அதைப் பார்க்கும் போது வெட்கம் அவனை மூடும்; என் கண்கள் அவளைக் காணும்; இனி வீதிகளின் சேற்றைப்போல மிதிக்கப்படுவாள். வசனம் 10





நம்முடைய வாழ்க்கையில் இருவிதமான சத்துருக்கள் இருக்கிறார்கள். ஒன்று சாத்தான் அடுத்து மனிதர்கள். வாழ்க்கை என்பது ஒரு போராட்டமே. சாத்தான் எல்லா கடவுளுடைய பிள்ளைகளுக்கும் எதிர். மனிதர்கள் எல்லாரும் நமக்கு எதிரிகள் கிடையாது. சத்துரு எதிர்பாராத நேரத்தில் வெள்ளம் போல திடீரென வரும் பொழுது ஆவியானவர் நமக்கு வெற்றி தருவார். கெர்ச்சிக்கிற சிங்கள் போல நம்மை விழுங்க சுற்றித் திரியும் சாத்தான் வெட்கப்பட்டுப் போவான். நமக்கு கண்ணி வலை விரிக்கின்ற எதிரிகள் வெட்கப்பட்டுப் போவார்கள்.
"இயேசுவின் இரத்தத்தைச் சொல்லி
இயேசுவுக்காய் சாட்சி சொல்ல
இயெசுவின் நாமத்தைச் சொல்ல
அவன் தொற்றுப் போனவன் தானே, ஓடிப்போவான்"

என்று பக்தன் பாடுகிறார். சத்துருவைச் சிலுவையில் தோற்கடித்த ஆண்டவர் பிசாசின் தலையை நசுக்கி மிதித்து விட்டார். ஆண்டவருடைய பிள்ளைகளாகிய நம்மைச் சத்துரு தொட முடியாது. அல்லேலுயா.





சிந்தனை: சத்துரு தலை கவிழ்ந்தோட

நித்தமும் கிரியை செய்திடும்

தமது முகப் பிரகாசம் தினமும் என்னில் வீசிடுதே


ஜெபம்: வெற்றி வேந்தரே, உலகத்தில் வரும் உபத்திரவங்களிலிருந்து வெற்றியை எனக்குத் தாரும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்