மதியம் வியாழன், 18 அக்டோபர், 2007

யார் எதிராக வருவார்கள்?

வேதபகுதி:மீகா 7:6- 9

மகன் தகப்பனைக் கனவீனப்படுத்துகிறான்; மகள் தன் தாய்க்கு விரோதமாகவும், மருமகள் தன் மாமிக்கு விரோதமாகவும் எழும்புகிறார்கள்; மனுஷனுடைய சத்துருக்கள் அவன் வீட்டார்தானே. வசனம். 6





ஒருவரின் பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர். இந்த வசனத்தை இயேசு மேற்கோள் காட்டுகிறார். நாம் எந்த ஒரு நல்லகாரியத்திற்கும், ஊழியத்திற்கும் போக ஒரு நடை முன் வைப்போமானால் முதலில் விமர்சிப்பவர் நம் குடும்பத்தார்தான் குறை சொல்லுவார்கள். ரொம்ப வேகமாக போகிறான் எங்கே போய் முட்டுவானோ தெரியவில்லை என்பார்கள். தடை போடுவார்கள், படிப்படியாகப் போகலாம் ஒரேயடியாக வேகம் வேண்டாம் என்பார்கள், தடை போடுவார்கள். இங்கே தேவை இருக்கும் போது வேறு இடத்துக்கு அனுப்பவும் வேண்டாம், போகவும் வேண்டாம் என்பார்கள். இயேசுவையே அவருடைய குடும்பத்தில் வெறுத்தார்கள். அவரை பிடித்து ஊழியத்தை தடுத்து நிறுத்த எண்ணினார்கள், பஸ்கா பண்டிகையின் போது விளம்பரப்படுத்திக் கொள் என்றார்கள். ஆனால் இயேசுவோ அவர்களுக்கு இடம் கொடுக்கவில்லை. நமக்கு எதிராக வருகிறவர்களுக்கு இடம் கொடாமலே நாம் முன்னேறிச் செல்வோம்.



சாது சுந்தர் சிங்கின் வாழ்க்கையிலே எத்தனை முறை தம் சொந்த ஜனங்களாலும், குடும்பத்தாராலும், சமயத் தலைவர்களாலும் பகைக்கப்பட்டார். ஆனால் இயெசுவைச் சொல்வதை மாத்திரம் நிறுத்தவில்லை. கடைசிவரை இயேசுவைப் பறைசாற்றினார். நாம் எப்படி இருக்கிறோம்.




சிந்தனை: யார் என்னைக் கைவிட்டாலும் இயேசு கைவிடமாட்டார். தந்தையும் தாயும் கைவிட்டாலும் கைவிடாத நேசரவர்.


ஜெபம்: கைவிடாத நேசரே, இவ்வுலக உறவுகளினாலே சோர்ந்து போகின்ற வேளையிலே என்னை உற்சாகப்படுத்தும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்