அரசுக்கு முறையாக வரி செலுத்துதல்

வேதபகுதி: லூக்கா 20:20 - 26

"இராயனுடையதை இராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்" லூக்கா 20 : 25

இயேசு கிறிஸ்துவினிடத்தில் குற்றம் கண்டுபிடிக்கும்படியாக பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவரிடத்தில் வேவுகாரரை அனுப்புகின்றார்கள். ஏனென்றால் இயேசு கிறிஸ்து தனது பிரசங்கங்களில் அவர்களது தவறான வாழ்க்கை முறைகளைச் சுட்டிக்காட்டினதினால் அவரிடம் குற்றம் கண்டுபிடித்து அவரைத் தேசாதிபதியினிடம் பிடித்துக் கொடுத்து விடலாம் என்று திட்டம் தீட்டுகின்றார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவோ அவர்களுடைய தந்திரத்தை அறிந்து கொண்டு அவர்களிடம் இராயனுடையதை இராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் செலுத்த வேண்டும் என்று பதில் கூறுகின்றார்.


பிரியமானவர்களே நாம் நம்முடைய வாழ்க்கையில் எப்படி இருக்கின்றோம். நாம் முறையாக வரி செலுத்துகின்றோமா? தசமபாகம் செலுத்துகின்றோமா? அல்லது கள்ள கணக்குக் காண்பித்து வரியைக் குறைவாகச் செலுத்துகின்றோமா? தசமபாகத்திலே வஞ்சனை செய்கின்றோமா? என்ன நிலைமையில் நாம் இருக்கின்றோம் சிந்தித்துப் பார்ப்போம்? கர்த்தர் நம்மைப் பார்த்து மனிதன் என்னைக் காணிக்கைகளினாலும் தசமபாகங்களினாலும் அல்லவோ வஞ்சிக்கிறான் என்று மல்கியா தீர்க்கன் மூலமாக நம்மை எச்சரிக்கின்றார். மேலும் தசமபாகங்களை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் அதன் மூலமாக நான் உங்களை இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்றும் மல்கியா தீர்க்கன் மூலமாகக் கூறுகின்றார். அரசுக்கு முறையாக வரி செலுத்துவோம், தசமபாகங்களைத் தேவனிடத்தில் கொண்டு வருவோம் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.



சிந்தனை: நான் அரசுக்கு முறையாக வரிசெலுத்துகின்றேனா? தசமபாகத்தைத் தேவனுக்குச் செலுத்துகின்றேனா?


ஜெபம்:
அன்பின் ஆண்டவரே நீர் கற்றுத் தந்தபடி நான் அரசுக்கு முறையாக வரி செலுத்தவும் உமக்குத் தசமபாகத்தைத் தவறாது செலுத்தவும் தேவ பெலனையும் ஒத்தாசையும் தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்