உலகப் பொருளில் உண்மை

வேதபகுதி: ஆதியாகமம் 14:14 - 24


"நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன் என்று,வானத்தையும பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன்." ஆதியாகமம் 14:22,23


ஆபிரகாம் சோதோமின் ஜனங்களைப் பிடித்துச் சென்ற இராஜாக்களைப் பின் தொடர்ந்து சென்று சோதோமின் ஜனங்கள் மற்றும் அவர்கள் கொள்ளையடித்துச் சென்றப் பொருள்களை எல்லாம் மீட்டு வருகின்றான். ஆபிரகாமை வரவேற்க சென்ற சோதோமின் ராஜா ஜனங்களை மட்டும் தன்னிடம் ஒப்படைத்து விட்டுப் பொருள்களை எல்லாம் ஆபிரகாமை எடுத்துக் கொள்ளும் படியுமாகக் கேட்கின்றான். ஆனால் ஆபிரகாம் எனக்கு ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி தன்னுடன் வந்தவர்களுடையப் பங்கை மாத்திரம் கேட்டுத் தான் மீட்டு வந்தப் பொருள்கள் மற்றும் ஜனங்களைச் சோதோமுடைய ராஜாவினிடம் ஒப்படைக்கின்றான். ஆகையினால் கர்த்தர் ஆபிரகாமை அதிகமாக ஆசீர்வதித்தார்.


மற்றவர்களுடையப் பொருளை எப்படி அபகரிக்கலாம், குறுக்கு வழியில் எப்படிப் பணம் சம்பாதிக்கலாம், கூட இருக்கின்றவர்களை எப்படி ஏமாற்றி அவர்களுடையப் பணத்தையோ அல்லது அவர்களுடைய சொத்தையோ எப்படி அபகரிக்கலாம் என்று இருக்கின்றக் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம் எப்படிப்பட்ட நிலைமையில் இருக்கின்றோம் என்று சிந்தித்துப் பார்ப்போம். நம்முடையச் சிந்தனைகள் மற்றும் செயல்கள் எப்படிப்பட்டவைகளாயிருக்கிறது என்று சிந்திப்போம். நாம் கர்த்தர் நம்மிடம் கொடுத்திருக்கின்ற உலகப் பொருள்கள், பணிகள் மற்றும் பதவிகளிலே உண்மையுள்ளவர்களாய் நடந்த்து நேர்மையாய் நடக்கும் போது கர்த்தர் நம்மையும் நம்முடையக் குடும்பங்களையும் ஆசீர்வதித்து வழிநடத்துவார்.



சிந்தனை: "அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்?" லூக்கா 16:11


ஜெபம்:
அன்பின் தேவனே நீர் எனக்கு இந்த உலகத்தில் எனக்குத் தந்திருக்கின்றக் காரியங்கள் அனைத்திலும் நான் உண்மையாய் நடந்து கொள்ள தேவ ஒத்தாசையையும் பெலனையும் தந்து வழிநடத்தும். ஆமேன்



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்