சாலமோனின் வீழ்ச்சி

"யெரொபெயாமை நோக்கி: பத்துத் துண்டுகளை எடுத்துக்கொள்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ராஜ்யபாரத்தைச் சாலொமோனுடைய கையிலிருந்து எடுத்துக் கிழித்து, உனக்குப் பத்துக் கோத்திரங்களைக் கொடுப்பேன்.ஆனாலும் என் தாசனாகிய தாவீதுக்காகவும், நான் இஸ்ரவேல் கோத்திரங்களில் எல்லாம் தெரிந்துகொண்ட எருசலேம் நகரத்துக்காகவும், ஒரு கோத்திரம் அவனுக்கு இருக்கும்"1 இராஜாக்கள் 11:31,32



கர்த்தர் சாலமோனை இந்த உலகத்தில் உள்ள ஐசுவரியத்தினாலும் ஞானத்தினாலும் மிகவும் அதிகமாக ஆசீர்வதித்திருந்தார். சாலமோனைப் போல ஐசுவரியத்திலும் ஞானத்திலும் கனம் பெற்றவன் இந்த உலகத்தில் ஒருவனும் இல்லை. சாலமோனுடையத் தரிசனத்தைத் தேடுவதற்குப் பற்பல நாடுகளில் இருந்தும் வந்துக் காத்துக் கிடந்தார்கள். இந்தச் சாலமோனுடையக் காலத்தில் பொன் வெள்ளியைப் போலத் தான் மதிக்கப் பட்டது. அப்படிப்பட்ட ஐசுவரியங்களைப் பெற்ற சாலமோனின் கடைசிக்காலத்தில் கர்த்தருடைய ஆசீர்வாதங்கள் குறைவு பட்டது. கர்த்தர் அகியா தீர்க்கத்தரிசியைக் கொண்டு இந்தச் சாலமோனுடைய நாட்களுக்குப் பிறகு இஸ்ரவேலின் ராஜ்ஜியம் இரண்டாகப் பிரிக்கப்படும் என்று கூறினார். இப்படிச் சாலமோனுடைய வாழ்க்கையில் கிடைத்த சாபங்களுக்குக் காரணம் என்னவென்று பார்ப்போமானால்


1.கர்த்தரின் கட்டளைகளை மீறுதல்:

சாலமோன் தனக்கு ஞானத்தையும் ஐசுவரியத்தையும் கனத்தையும் கொடுத்த தன்னுடையத் தேவனாகியக் கர்த்தரை மறந்து தன்னுடைய மனைவிகளின் விருப்பப்படி கர்த்தர் அவனை எச்சரித்திருந்தும் அந்நிய தெய்வங்களைத் தேடிக் கர்த்தரை விட்டு விட்டான்.

"ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சாலொமோனுக்கு இரண்டுவிசை தரிசனமாகி, அந்நிய தேவர்களைப் பின்பற்றவேண்டாம் என்று கட்டளையிட்டிருந்தும், அவன் கர்த்தரை விட்டுத் தன் இருதயத்தைத் திருப்பி, அவர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமற்போனதினால் கர்த்தர் அவன்மேல் கோபமானார்."1 இராஜாக்கள் 11:9,10

2. அந்நியத் தெய்வங்களுக்குப் பலீபிடம் கட்டுதல்:

சாலமோன் ராஜா அந்நியத் தேவர்களைத் தேடினதும் அல்லாமல் அந்தத் தெய்வங்களுக்குத் தன்னுடைய மனைவியரின் விருப்பப்படி அவைகளுக்குக் கோவில்களைக் கட்டி அவைகளுக்குப் பலியிடவும் செய்தான். இஸ்ரவேல் ஜனங்களையும் கர்த்தரைவிட்டு வழிவிலகிப்போகச் செய்தான். இப்படி அவன் செய்தக் காரியங்களினிமித்தம் கர்த்தர் அவன் மேல் மிகவும் கோபமானார்.

"அவர்கள் என்னைவிட்டு, சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும், மோவாபியரின் தேவனாகிய காமோசையும், அம்மோன் புத்திரரின் தேவனாகிய மில்கோமையும் பணிந்துகொண்டு, அவன் தகப்பனாகிய தாவீததைப்போல என் பார்வைக்குச் செம்மையாய் இருக்கிறதைச் செய்யவும், என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளவும், அவர்கள் என் வழிகளில் நடவாமற்போனபடியினால் அப்படிச் செய்வேன்."1 இராஜாக்கள் 11 :33

3. சிற்றின்பப் பிரியனாக வாழ்ந்தான்:

சாலமோன் ராஜா தான் வாழ்ந்தக் காலத்திலே தனக்காகப் பெண்களைக் கொள்ளுவதிலும் தன்னுடைய மனைவியருக்காக அரண்மனைகளைக் கட்டுவதிலும் தன்னுடைய மனைவியரின் ஆசைகளை நிறைவேற்றுவதிலும் முன்னோடியாகத் திகழ்ந்து உலகத்திலும் அதின் ஆசைகளிலும் சிக்குண்டு சிற்றின்பப் பிரியனாகத் திரிந்துக் கர்த்தரை விட்டுவிட்டான்.

"அவனுக்குப் பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள், அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப் பண்ணினார்கள்" 1 இராஜாக்கள் 11:3


நாமும் கர்த்தருடையக் கட்டளைகளை மீறி நடந்து, அந்நியத் தெய்வங்களை நாடி, இந்த உலகத்தின் சிற்றின்பங்களிலேச் சிக்குண்டு அலைவோமானால் நாமும் கர்த்தர் நமக்குத் தருகின்ற ஆசீர்வாதங்களை இழக்க நேரிடும். மாறாக நாம் கர்த்தருக்குப் பிரியமாய் நடந்து, உலகத்தின் ஆசைகளை விட்டு நடப்போமானால் பரலோக இராஜ்ஜியத்திற்குச் சுதந்திரவாளியாகி இவ்வுலகத்தின் ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ளுவொம்.





சிந்தனை: நான் கர்த்தருக்குப் பிரியமாக நடக்கிறேனா?


ஜெபம்:
அன்பும் இரக்கமும் நிறைந்த ஆண்டவரே நான் உமக்குப் பிரியமாக நடந்து அதன் மூலமாக இந்த உலகத்தின் அசீர்வாதங்களையும் பரலோக இராஜ்ஜியத்தையும் சுதந்தரித்துக் கொள்ள உதவி புரியும். ஆமேன்



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை நிகழ்வுகள் ஓவியமாக

இயேசு கிறிஸ்து மாட்டுத்தொழுவத்தின் முண்ணனையில் பிறந்த போது அவரது பெற்றோர் யோசேப்பு மற்றும் மரியாளுடன்


இயேசு பிறந்த எட்டாம் நாளில் விருத்தசேதனம் பண்ண ஆலயத்திற்கு வந்த போது சிமியோன் என்னும் முதியவர் ஆசீர்வதிக்க மரியாளிடம் குழந்தையை வாங்குகிறார்.

இயேசு தனது 12வது அகவையில் எருசலேம் தேவாலயத்திற்குத் தனது பெற்றோருடன் பண்டிகையை ஆசரிக்க வந்தார்


இயேசு கிறிஸ்து தனது 30வது அகவையில் யோர்தான் நதியில் யோவான்ஸ்நானகனால் ஞானஸ்னானம் பெற்றார்.


நல்ல மேய்ப்பன் இயேசு கிறிஸ்து

சிறு குழந்தைகளை நேசித்த இயேசு

இயேசு மறுரூபமான காட்சி

நாசரேத்தூரில் இயேசு ஜெப ஆலயத்தில் ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமம் வாசித்தார்.

எருசலேம் நகர் வீதியில் இயேசு பவணி வருகிறார்.

இயேசு சிலுவையில் மரிப்பதற்கு முந்தின இரவில் பஸ்கா பண்டிகையை ஆசரிக்கிறார்.

இயேசு சிலுவையில் மரிப்பதற்கு முந்தின இரவில் பிதாவிடம் ஜெபிக்கிறார்.

இயேசு கள்ளர்கள் மத்தியில் அறையப்பட்டார்,

இயேசு தாம் சொன்னபடி மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார்.

இயேசு உயிர்த்தெழுந்த பின்பாகத் தம்முடைய சீஷர்களுக்கு காட்சியளிக்கிறார்.