நன்றி செலுத்தும் உணர்வு

"அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பி வந்து உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தினான்" லூக்கா 17:5

நாம் ஒரு நபரிடத்திலே நன்மைக்காகச் செல்கின்றோம். அவரும் செய்து தருகிறேன் என்று சொல்லுகிறார். நாம் நமக்கு நன்மை கிடைத்த பின்பு அவரைப் பார்த்து நாம் நன்றி சொல்லுகின்றபோது அவருக்கு மற்ற மக்களுக்கு நம்மால் நன்மை செய்ய முடிகின்றது என்று மகிழ்கின்றார். இது அவருக்கு மேலும் பல நன்மைகளை மற்ற மக்களுக்குச் செய்ய ஒரு உந்துதலாக இருக்கும். மாறாக நமக்கு நன்மை செய்தவரை நாம் மதிக்காமல் நடக்கும் போது அந்த மனிதருக்கு நன்மை செய்கின்ற எண்ணமே இல்லாமல் போய் விடும்.


நன்றி சொல்வது என்பது மிக உயரிய பண்பு ஆகும். இந்தக் காலத்தில் நன்றி சொல்வது நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது மாறாக நன்றி மறத்தல் அதிகமாகிக் கொண்டிருக்கின்றது. நமது ஆண்டவர் நமக்கு எவ்வளவோ அதிகமான நன்மைகளைச் செய்திருக்கின்றார். நாம் ஆண்டவர் நமக்குச் செய்த ஒவ்வொரு நன்மைகளையும் நினைத்து அவருக்குத் துதிகளையும் ஸ்தோத்திரங்களையும் ஏறெடுக்கும்போது கர்த்தர் நம்மில் மிகவும் பிரியப்படுகின்றார். மேலும் நமக்குப் பல்வேறு ஆசிர்வாதங்களையும் தந்து நம்மை மகிழ்ச்சிப்படுத்துகின்றார். மாறாக நாம் ஆண்டவர் நமக்குச் செய்த நன்மைகளை மறந்து நடப்போமானால் நமக்கு ஆசிர்வாதக் குறைவு தான் கிடைக்கும்.


சிந்தனை: நன்றி மறப்பது நன்றன்று

ஜெபம்:அன்பின் தேவா, எனக்கு நன்றி நிறைந்த உள்ளத்தை அதிகமாகத் தந்து வழிநடத்தும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்