மீட்கப்பட்டவர்களின் மகிழ்ச்சி

"கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்." ஏசாயா 35:10







மீட்கப்பட்டவர்கள் யார் என்று பார்ப்போமானால் கல்வாரியில் சிந்த்தப்பட்ட கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டவர்கள். கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் பலன் என்னவென்றால் அவர்களுக்கு நித்திய மகிழ்ச்சி கிடைக்கும். நித்திய மகிழ்ச்சி என்றால் அவர்களுக்கு இனி துன்பமே கிடையாது சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் மட்டுமே என்றைக்கும் காண்பார்கள். ஆடிப்பாடி மகிழ்வார்கள். அவர்களுக்குத் துக்கம் என்பதும் இனி இல்லை.







இவைகள் அனைத்தும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது நடக்கும் காரியங்கள். நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு மீட்கப்பட்டவர்களாகும் போது நமக்கும் அந்த பாக்கியம் கிடைக்கும். நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்படாமல் பாவங்களோடு வாழ்ந்து கொண்டிருப்போமானால் நாம் பரிதாபத்திற்குரியவர்களாவோம். கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்து வேதத்தில் சொல்லப்பட்டக் காரியங்களெல்லம் நிறைவேறி வருகின்றது. கிறிஸ்துவானவர் விரைவில் வரப்போகின்றார் அப்பொழுது நாம் தகுதியுடையவர்களாயிருந்தால் மட்டுமே அவரைக் கண்டு தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும் மற்றவர்களையெல்லாம் அவர் அக்கினிக் கடலிலே தள்ளி விடுவார்.







சிந்தனை: நான் கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டிருக்கின்றேனா?





ஜெபம்:
கர்த்தாவே என்னை உம்முடைய தூய இரத்தத்தால் கழுவி உம் அன்பினால் என்னை நிரப்பியருளும். ஆமேன்.







தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்