ஒப்புக் கொடுத்தல்

"உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்" சங்கீதம் 37 : 5



எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு வேடிக்கையானக் கதை.ஒரு சிறுவன் அவனுடைய தாயாரிடம் அவன் பிறந்தநாளுக்கு அவனுக்கு விளையாட்டு பைக் ஒன்று வாங்கித் தரும்படிக் கேட்டான். அதற்கு அவனுடையத் தாயார் நீ இந்த வருடத்தில் நடந்து கொண்டவைகளையெல்லாம் கடவுளுக்குக் கடிதமாக எழுது அவர் உனக்கு பைக் கிடைக்கச் செய்வார் என்று கூறினார்கள். அவனும் தனது அறைக்குச் சென்றான். நான் நல்லபையன் எனக்கு ஒரு பைக் தாருங்கள் என்று எழுதினான். அவன் நன்றாகச் சேட்டை செய்யக்கூடியப் பையன் என்பதால் அவனுக்கு அந்தக் கடிதத்தில் திருப்தி இல்லாததால் அதைக் கிழித்துப் போட்டான். பின்னர் நான் கெட்டப் பையனாக நடந்து கொண்டேன் எனக்கு பைக் தந்தால் நான் நல்லப் பையனாக நடந்து கொள்வேன் என்று எழுதினான். தான் நல்ல பையனாக நடக்கவில்லை எனவேக் கடவுள் நமக்கு பைக் தரமாட்டார் என்று எண்ணி அந்தக் கடிதத்தைக் கிழித்து விட்டு ஆலயத்தை நோக்கிச் சென்றான். அவனுடையத் தாயாரும் நாம் நினைத்தது நடந்து விட்டது நமது பையன் திருந்தி விடுவான் என்று நினைத்தார். ஆலயத்திற்குச் சென்றவன் அங்கு உள்ளச் சிலுவையை எடுத்துக் கொண்டுத் தனது வீட்டிற்கு வந்து ஆண்டவரே உமது சிலுவையை நான் எடுத்து வைத்துள்ளேன் உமக்குவேண்டுமானால் எனக்கு பைக் கொடுத்துவிட்டு வாங்கிக் கொள்ளவும் என்று எழுதினான்.



வேடிக்கையானக் கதை என்றாலும் நாமும் இப்படித்தான் பலவேளைகளில் இறைவனிடம் நீர் எனக்கு இந்தக் காரியத்தை வாய்க்கப் பண்ணினால் நான் இதைச் செய்கிறேன் அதைச் செய்கிறேன் என்று ஜெபிக்கிறோம். ஆனால் நாம் கர்த்தருக்கு நம்மை அர்ப்பணித்து விட்டு நாம் செயல்படுவோமானால் நாம் கேட்காத ஆசீர்வாதங்களையும் நமக்குத் தந்தருளுவார். ஆனால் நாம் கர்த்தரைக் கட்டாயப்படுத்தி எனக்கு இந்தக் காரியம் கண்டிப்பாகக் கிடைக்கவேண்டும் என்று ஜெபிப்போமானால் நமக்கு அந்தக் காரியம் கிடைத்தாலும் ஒரு முழுமையான ஒன்றாக இருக்காது. நாம் நம்மைக் கர்த்தருடையக் கைகளில் ஒப்புக் கொடுக்கும் போது அவரே நம்முடைய எல்லாக் காரியங்களையும் பார்த்துக் கொள்ளுவார். நாம் எதற்காகவும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.





சிந்தனை: நான் என்னுடைய சுய இஷ்டப்படி நடக்கிறேனா? அல்லது கர்த்தருடையக் கரத்தில் ஒப்புவித்து அவருக்கு விருப்பமாய் நடக்கிறேனா?


ஜெபம்:
தேவனே நான் என்னுடைய சித்தத்தின்படி அல்ல உம்முடையச் சித்தத்தின்படிச் செயல்பட அருள் தாரும். ஆமேன்.

துதித்தல்

"கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமும், இரட்சிப்பை உண்டாக்கினது." சங்கீதம் 98: 1



நம்முடைய தேவனாகியக் கர்த்தர் நம்மைப் படைத்திருப்பதன் நோக்கம் அவர் படைத்தப் படைப்புகளை நாம் அனுபவித்து நாம் பெற்ற நன்மைகளை நினைத்து நாம் கர்த்தரைத் துதிப்பது தான். ஆனால் நாமோ கர்த்தரிடமிருந்து நன்மைகள் பலவற்றை பெற்றாலும் நாம் அவரை நன்றி செலுத்தித் துதிப்பதை மறந்து விடுகிறோம். கர்த்தரைத் துதித்துப் பாடுவதிலே கிடைக்கின்ற இன்பம் பேரானந்தம்.



வேதநாயகம் சாஸ்திரியார் அவர்கள் தஞ்சை சரபோஜி மன்னரிடத்திலேப் பணியாற்றும் போது ஒரு முறை மன்னர் சாஸ்திரியாரிடம் தன்னுடையக் கடவுளைப் பற்றிப் பாடும்படி கூறினார். ஆனால் வேதநாயகம் சாஸ்திரியார் நான் கர்த்தரைப் பற்றி மட்டும் தான் பாடுவேன் என்று சொல்லி ஏசுவையேத் துதி செய் என்றப் பாடலை எழுதி அங்கு அவையோர் மத்தியில் பாடினார். அவையிலிருந்த அனைவரும் மன்னர் இவருக்கு என்ன தண்டனைக் கொடுக்கப் போகிறாறோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் மன்னரோ நீர் உமது கடவுளைக் குறித்தேப் பாடும் என்று விட்டு விட்டர். ஆம் நாம் நம்முடையத் தேவனைக் குறித்துப் பாடும் போது கர்த்தர் நம்மை நினைத்து மற்ற மக்களிடம் கிரியை செய்கிறார்.



ஆனால் ஒரு சிலராகிய நாமோ சினிமாப் பாடல்களையும். ஒரு சிலர் மேற்கத்திய பாப் பாடல்கள் தான் பிடிக்கும் என்று அவைகளை தங்கள் வாயினால் பாடுகிறார்கள். அவர்கள் ஆலயத்திற்கு வந்து விட்டால் ஏதோ தெரியாத இடத்திற்கு வந்து விட்டது போல அங்கும் இங்கும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். நாம் கர்த்தரைப் பாடப் பாட நம்முடைய உள்ளம் அன்பினால் பூரிக்கும், நம்முடைய பாவக் கட்டுகள் எல்லம் பறந்து போகும்.




சிந்தனை: நம்முடைய வாயினால் எந்தப் பாடல்களைப் பாடுகிறோம்?


ஜெபம்:
ஆண்டவரே நான் எப்பொழுதும் உம்மைத் துதிக்கக் கிருபை தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

அழைப்பு

வேதபகுதி: எபேசியர்: 4 :1 - 8


"நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து.." எபேசியர்: 4 :1



கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் ஊழியக்காரனாகவும் ஊழியக்காரியாகவும் தான் அழைக்கப்பட்டிருக்கிறோம். போதகர்கள், நற்செய்தியாளர்கள், மிஷனெரிகள் மட்டும் தான் ஊழியஞ்செய்வதற்காக அழைக்கப்பட்டுள்ளதாக நாம் நினைத்துக் கொண்டு இருக்கின்றோம். ஆனால் கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவருமே ஒவ்வொரு வகையிலும் ஊழியஞ்செய்வதற்காகத் தான் இந்த உலகத்தில் ஆண்டவரால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறோம். போதகர்கள் ஞானஸ்னானம் கொடுக்கும் போது கிறிஸ்துவுக்காக ஊழியம் செய்வாயா என்று நம்மிடம் கேட்கும் போது நான் கடவுளுடைய ஒத்தாசையால் செய்வேன் என்று வாக்குக் கொடுத்து விட்டு அந்த ஆராதனை முடிந்தவுடன் மறந்து விடுகின்றோம்.



கர்த்தர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தாலந்தைக் கொடுத்திருப்பார். ஒரு சிலருக்கு நன்றாகப் பாடல் பாடும் தாலந்தைக் கொடுத்திருப்பார், ஒரு சிலருக்கு நன்றாக இசைக்கருவிகளை மீட்டக்கூடியத் தாலந்தைக் கொடுத்திருப்பார். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமானத் தாலந்துகளைக் கொடுத்திருப்பார். நாம் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறத் தாலந்துகளை உணர்ந்து அவைகளைக் கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படும்படி நாம் பயன்படுத்தும் போது கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படுகின்றது. நாமோ நமக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறத் தாலந்தை ஒரு வெள்ளிக்காசைப் பெற்ற மனிதனைப் போலப் பயன்படுத்தாமல் இருப்போமானால் கர்த்தர் நம்மையும் எரிகிற அக்கினிக்கடலிலே தள்ளுவார்.




சிந்தனை: நான் எனக்குக் கொடுக்கப்பட்டுருக்கிற அழைப்பை உணர்ந்து அதன்படி நடக்கிறேனா?


ஜெபம்:
ஆண்டவரே நான் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றத் தாலந்துகளை உம்முடைய நாம மகிமைக்காகப் பயன்படுத்தி அதன்மூலமாக உம்மை அறியாத மக்களை உம்மண்டை வழிநடத்தக் கிருபை தாரும். ஆமேன்



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்