பகைவனையும் நேசி

வேத பகுதி: I சாமுவேல் 26


"சவுல் தாவீதை நோக்கி: என் குமாரனாகிய தாவீதே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்; நீ பெரிய காரியங்களைச் செய்வாய்; மேன்மேலும் பலப்படுவாய் என்றான்" 1 சாமுவேல் 26 : 25

தாவீது இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் சவுல் ராஜாவை விடப் பெயர் பெற்றவனாக மாறுகின்றான். இதனைப் பொறுக்க முடியாத சவுல் தாவிதைக் கொலை செய்ய நினைக்கின்றான். இதை அறிந்த தாவீது சவுலுக்குத் தப்பி ஒடுகின்றான். சவுல் தாவீதைப் பின் தொடருகின்றான். ஒரு மலையில் தாவீதும் இன்னொரு மலையில் சவுலும் இருக்கின்றார்கள். சவுலின் கூட்டத்தார் தூங்குகின்ற வேளையில் தாவீதும் அபிசாயும் சவுல் இருக்கின்ற இடத்திற்கு வருகின்றார்கள். அபிசாய் தாவீதிடம் நம்முடையப் எதிரியாய் இருக்கின்ற சவுலைக் கொன்று போடுவோம் என்று தாவீதிடம் கூறுகின்றான். ஆனால் தாவீதோ சவுலைத் தப்ப விட்டு சவுலுடைய ஈட்டியையும் தண்ணீர்ச் சொம்பையும் எடுத்துக் கொண்டு வருகின்றார்கள். தாவீது தன்னுடைய இடத்திற்கு வந்து சவுலின் கூட்டத்தாரிடம் பேசுகின்றான். இதனை உணர்ந்த சவுல் தாவீதை நீ மேன்மேலும் பலப்படுவாய் என்று ஆசீர்வதித்து தன் வழியே செல்லுகின்றான்.

ஆம் பிரியமானவர்களே நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் "உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள். மத்தேயு 5: 44,45" என்று தனது மலைப் பிரசங்கத்தில் கூறுகின்றார். நாமும் நமது சத்துருக்களாய், பகைஞர்களாய் இருக்கின்றவர்கள் செய்கின்றத் தீமையானக் காரியங்களுக்குப் பதிலாக நன்மையைச் செய்வோமானால் அவர்களும் நமது நல்ல நடக்கைகளைப் பார்த்து கிறிஸ்துவின் அன்பினை அறிந்து கொள்வார்கள்.நம்மையும் கர்த்தர் ஆசீர்வத்து வழிநடத்துவார்.


சிந்தனை: நான் எனக்குத் தீங்கு செய்கிறவர்களுக்குப் பதிலாகத் தீங்கு செய்கின்றேனா அல்லது கிறிஸ்துவின் அன்பினைக் காட்டுகின்றேனா?

ஜெபம்:
அன்பின் தேவா, நான் எனக்குத் தீமை செய்கிறவர்களுக்குப் பதிலாக நன்மையைச் செய்யும்படிக் கிருபையத் தந்து அதன் மூலமாக உம்முடைய நாமம் மகிமைப் படும் படி செய்யும். ஆமேன்.
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்