வேதபகுதி:மீகா 7:5
சினேகிதனை விசுவாசிக்க வேண்டாம், வழிகாட்டியை நம்ப வேண்டாம்; உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறவாமல் எச்சரிக்கையாயிரு. வசனம் .5
மாப்பிள்ளை மும்பையில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். மாப்பிளை வீட்டார் பெண் பார்த்துக் கொண்டிருப்பதாக செய்தி வந்தது. தென் தமிழ்நாட்டில் குடியிருந்த ஒரே மகளையுடையவர், மகளுக்குக் குடும்ப வாழ்க்கை சொகுசாக அமையவேண்டும் என்று விரும்பி தன் மகளைத் திருமணம் முடித்துக் கொடுத்தார். மாதத்தில் ஒரு நாள் கணவர் இரவு வீடு வராமலிருந்தார். கேட்டாள், மறைத்துவிட்டார். ஊரை மூட உளைமுடி இல்லை என்ற வழக்குச் சொல்லின் படி மனைவிக்கு கணவனின் கள்ளத் தொடர்பு தெரியவந்தது. நம்பிக்கைத் துரோகம் கணவன் மனைவிக்கிடையில். ஒரே குடும்பத்தின் சகோதர சகோதரிகள், நண்பர்கள் கூட ஏமாற்றி விடுகிறார்கள். பக்கத்தில் இருப்பவர் ஏமாற்றுகிறார். சங்கீதம் 118:8ன் படி மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும் கர்த்தர்பேரில் பற்றுதலாயிருப்பதே நலம் என்று சொல்லப்படுகிறது. கவனமாயிருப்போம், மற்றவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யாமலிருப்போம்.
சிந்தனை: சிம்சோனுக்கு ஒரு தெலிலாள்
இஸ்ரவேலுக்கு ஒரு ஆகான்
இயேசுவுக்கு ஒரு யூதாஸ்
மற்றவர்களுக்கு நாம் எப்படி?
ஜெபம்: நம்பிக்கையின் நங்கூரமே, உம்மை மறுதலிக்காமல் உண்மையாய் உம்மை ஜீவிக்க உம்முடைய தூய ஆவியால் என்னைப் பெலப்படுத்தும். ஆமேன்.
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்
0 comments:
கருத்துரையிடுக