மதியம் செவ்வாய், 16 அக்டோபர், 2007

போலியான வாழ்க்கை

வேதபகுதி:மீகா 7:4

அவர்களில் நல்லவன் முட்செடிக்கொத்தவன், செம்மையானவன் நெரிஞ்சிலைப்பார்க்கிலும் கடுங்கூர்மையானவன்; உன் காவற்காரர் அறிவித்த உன் தண்டணையின் நாள் வருகிறது; இப்பொழுதே அவர்களுக்குக் கலக்கம் உண்டு. வசனம் .4





இயேசுவின் காலத்தில் பரிசேயர், சதுசேயர், யூதர்கள் தங்கள் தான் நீதிமான்கள் என்று வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து மாயக்காரரே உங்களுக்கு ஐயோ என்று சாடினார். இன்று அநேகர் வெளிப்புறமாக சமுதாயம், சபைக்கு முன் உத்தமர் போல் நடிக்கிறார்கள். ஓர் ஊழியர் ஒரு சபையில் ஊழியம் செய்து வந்தார். அவர் ஊழியஞ்செய்கிற சபையில் சபையார் எல்லாரும் குறை சொன்னார்கள். என்னவென்று பார்த்தால் அவர் அவருடைய மனைவியிடம் பேசிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டதாகக் கூறினார்கள். அருமையானவர்களே, நாம் இன்றைக்கு நல்லவன் போல வேஷம் போடுகிறோம். அதனால் தான் வேதம் நல்லவன் முட்செடிபோலவும், செம்மையானவன் நெரிஞ்சலைப் போலவும் இருக்கிறான் என்று தீர்க்கன் சொல்லுகிறார்.



Duplicate பெருகி வரும் காலத்தில் Original ஆக வாழ அழைக்கப்படுகிறோம். ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவனாக அல்ல எல்லா நாலும் கிறிஸ்தவனாக வாழ அழைக்கப்படுகிறோம்.





சிந்தனை: ஞாயிற்றுக்கிழமையிலே வேடத்தைக் கலைப்பேன்.
கோயிலிலே காபிரியேல் நானேதான்
பாட்டுப்பாடி பரமனோடு ஒன்றிய பின்னே
கூட்டை விட்டு சுய உருவில் வெளியிலே வருவேன்.


ஜெபம்: வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளைப்போல் பார்வைக்குப் பகட்டாய் வாழாதபடி உள்சுத்தம் தாரும் தேவனே. ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்