வேதபகுதி:ஆமோஸ் 1:6 - 8
பெலிஸ்தரில் மீதியானவர்கள் அழியும்படிக்கு என் கையை எக்ரோனுக்கு விரோதமாகத் திருப்புவேன். வசனம் 8
பெலிஸ்தியர் குடியிருந்த தேசமானதால் பெலிஸ்தியா எனப்பட்டது. பிற்காலங்களில் கானானியரும் மோவாபியரும் அங்கேயிருந்தார்கள். எபிரேயர் அவர்களைத் துரத்திவிட்டு அங்கே குடியேறினார்கள்.பெலிஸ்தர்கள் செய்த அக்கிரமங்களினிமித்தம் தேவன் அவர்களை அழிப்பேன் என்று ஆமோஸ் தீர்க்கதரிசியிடம் தேவன் உறைக்கிறார்.
இஸ்ரவேலரை தேவன் மீட்டுக் கொண்டதினிமித்தம்( யாத்திராகமம்15:14) பெலிஸ்தியரைத் திகில் பிடிக்கும்(ஏசாயா 14:29). முழு பெலிஸ்தியாவே உன்னை அடித்தகோல் முறிந்ததென்று அக்களிப்பாயிராதே. பாம்பின் வேரிலிருந்து கட்டு விரியன் தோன்றும், அதின் கனி பறக்கிற அக்கினி சர்ப்பமாயிருக்க்கும்.
சிலந்திப் பூச்சி வலையைப் போல சாத்தான் அநேக வலைகளை விரித்து வைத்திருக்கிறான். சிலந்திப் பூச்சியின் வலையில் சிக்கும் பூச்சிகளை அந்த சிலந்தி தன் கால்களால் அன்போடு இழுக்கிறது போல இரத்தத்தை உறிஞ்சி தொங்க விட்டுவிட்டு சென்று விடுகிறது.
சிந்தனை: பாவச் செயல்களை உன் வாழ்வில் கூடுகட்ட விடாதே.
ஜெபம்: கர்த்தாவே, பாவத்திற்கு எதிர்த்துப் போராடக் கிருபை தாரும். ஆமேன்.
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்
0 comments:
கருத்துரையிடுக