மதியம் திங்கள், 29 அக்டோபர், 2007

ஏதோமுக்குத் தண்டனை

வேதபகுதி:ஆமோஸ் 1:11 - 12


எதோம் தன் சகோதரனை பீறிப்போட்டு, தன் மூர்க்கத்தை நித்திய காலமாக வைத்திருக்கிறானே. வசனம் 11.



ஏதோமின் பூர்விகத் தலைநகர் போஸ்றா, ஏதோமியர் இஸ்ரவேலரைத் தங்கள் தேசத்தின் வழியாய் போக இடங்கோடுக்கவில்லை. மோசே காதேசிலிருந்து ஏதோமின் இராஜாவினிடத்திர்கு ஸ்தானாபதிகளை அனுப்பி எகிப்திலிருந்தே தேவன் எங்களை விடுவித்தார். எனவே உங்கள் தேசத்தின் வழியாய் கடந்து செல்ல பல நிபந்தனைகளோடே அனுமதி கேட்டும் கொடுக்கவில்லை. இதனால் இஸ்ரவேல் அவனை விட்டு விலகிப்போனார்கள்.



சவுல் இராஜாவாயிருந்த நாட்களில் இவர்களோடு யுத்தம் செய்து தோற்கடித்தான் (1 சாமுவேல் 14:47). பிற்பாடு தாவீதும் அப்படியே செய்தான் (11 சாமுவேல் 8:14). நேபிகாத்நேச்சார் எருசலேமை முற்றுகையிட்டபோது இவர்கள் அவனோடு சேர்ந்திருந்தார்கள்.



சார்லஸ் பின்னி தன் ஊழியத்தில் சிறிது வல்லமை குறைந்து விட்டாலும் உடனே உபவாசித்து, ஜெபித்து, கண்ணீரோடு தன் குறைவுகளி அறிக்கை செய்து புதுபெலனைப் பெற்றுக் கொள்ளுவார்.



தேமான் என்பது ஏதோம் தேசத்திலுள்ள ஒரு கோத்திரமும் அதைச் சார்ந்த நாடாகும். இந்தக் கோத்திரத்தார் அறிவில் சிறந்தவர்கள் என்று மற்ற ஜனங்கள் யாவரும் நினைத்தார்கள். யோபுவுக்குப் புத்தி சொன்னவர்களில் ஒருவன் இந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவன்.



சிந்தனை: முதலாவது உன் ஜீவியத்தில் காணும் குறைகளைக் கண்டு பிடிக்க எத்தனி.


ஜெபம்: ஆண்டவரே, என்னிலுள்ள பிடிவாதத்தை அகற்றும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்