இஸ்ரவேலுக்குத் தண்டனை

வேதபகுதி:ஆமோஸ் 2 : 6 - 16


இஸ்ரவேல் நீதிமானைப் பணத்திற்கும் எளியவனை ஒரு ஜோடு பாதரட்சைக்கும் விற்றுப் போட்டார்களே. வசனம் .6



இஸ்ரவேலர் கானானியருடைய பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொண்டதோடு, பாகால் வணக்கத்திலும் பழகிக் கொண்டார்கள். ஒரே தேவ வணக்கத்தை விட்டுவிட்டுப் பல தேவர்களையும் சேவித்தார்கள்.



இவ்விதமாய் எகிப்திலிருந்து விடுவித்து கானானைச் சுதந்திரமாய்க் கொடுத்த தேவனை மறந்தார்கள். மோவாபியரும் அம்மோனியரும் இஸ்ரவேலரைக் கொள்ளையடித்தார்கள். பெலிஸ்தியர் இஸ்ரவேலருக்கு இடுக்கன் செய்தார்கள்.



ஒருமுறை சர் ஐசக் நியூட்டன் என்ற புகழ் வாய்ந்த விஞ்ஞானியை ஒருவர் பார்த்து"ஐயா நீங்கள் கண்டுபிடித்த நூற்றுக்கணக்கான கண்டுபிடிப்புகளிலே மிகச்சிறந்த கண்டுபிடிப்பு எது? என்று வினவ என் பாவங்களை மன்னிக்க இயேசுவின் இரத்தமே அல்லாமல் வேறொன்றும் இல்லை என்ற கண்டுபிடிப்புதான்" என்று சொன்னாராம்.



ஆமோஸ் கால மக்கள் தேவன் காட்டும் ஜீவ வழியை விரும்பவில்லை. கர்த்தருடைய வேதத்தை வெறுத்தார்கள். தீர்க்கதரிசிகளை நோக்கி நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டாம் என்று கற்பித்தார்கள். இவ்விதமாய் அவர்கள் அழிவின் பாதையைத் தெரிந்து கொண்டார்கள்.



நாம் எப்படிப்பட்டப் பாதையைத் தெரிந்துக் கொண்டிருக்கிறோம்? அழிவின் பாதையா? ஜீவனுக்கேதுவான பாதையா?



சிந்தனை: நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. நீதிமொழிகள் 12:28


ஜெபம்: கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்