மதியம் திங்கள், 29 அக்டோபர், 2007

அம்மோனியாவின் பாவம்

வேதபகுதி:ஆமோஸ் 1:13 - 15


அம்மோன் புத்திரர் தங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்கும்படிக்குக் கீலேயாத்தின் கர்ப்பஸ்திரீகளை கீறிப்போட்டார்களே. வசனம் .13



அம்மோன் புத்திரர் செய்த பாவங்களினிமித்தம் அவர்கள் மேல் வரும் ஆக்கினையத் திருப்பமாட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.இந்த அம்மோன் புத்திரர் லோத்தின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.



அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ் மரித்தபோது, இஸ்ரவேலில் ராஜாவாயிருந்த தாவீது அவனுடைய குமாரனுக்கு ஆறுதல் கூறுவதற்கு ஸ்தானாதிபதிகளை அனுப்பிய போது, அம்மோன் புத்திரர், ஸ்தானாதிபதிகளை அவமானப்படுத்தி அனுப்பினார்கள். (1 நாளாகமம் 19). இப்படி மற்றவர்களைப் பழித்தல், அவமானப்படுத்துதல் போன்ற தேவனுக்குப் பிரியமில்லாத காரியங்களில் ஈடுபட்டார்கள். இவர்களைத் தேவன் பல்வேறு தீர்க்கத்தரிசிகளின் மூலமாக எச்சரிக்கிறார். ஆனாலும் அவர்கள் தங்கள் பாவங்களை விட்டு மனம் திரும்பவேயில்லை. ஆகவே தேவன் அவர்களை அழிக்க நினைக்கிறார்.



நாமும் தேவனுடைய ஊழியக்காரர்களின் மூலமாக கொடுக்கும் எச்சரிப்புகளுக்கு அசட்டையாக இருப்போமானால் நம்முடைய வாழ்க்கையும் கேள்விக்குறியதாக இருக்கும். தேவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்து தேவ ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளுவோம்.



சிந்தனை: தேவன் கொடுக்கும் எச்சரிக்கைக்குக் கீழ்ப்படிந்து நட.


ஜெபம்: தேவனே உமது வசனத்திற்குக் கீழ்ப்படிந்து நடக்கக் கிருபை தாரும்.ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்