மதியம் புதன், 24 அக்டோபர், 2007

வற்றாக் கிருபை நதியே

வேதபகுதி:மீகா 7:20


தேவரீர் பூர்வநாட்கள்முதல் எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட சத்தியத்தை யாக்கோபுக்கும், கிருபையை ஆபிரகாமுக்கும் கட்டளையிடுவாராக.



ஆண்டவரின் ஆராய்ந்து முடியாத, அளவிடமுடியாத ஒரு குணம் அவருடைய கிருபை தான். கிருபை மனிதனால் காட்டமுடியாது. கிருபை என்பது அருகதையில்லாத, வக்கில்லாத, இழிவான நிலையிலிருக்கும் ஒருவருக்கு கிடைக்கும் ஆண்டவரின் மாறாத கொடை. எபேசியர் 2:8ல் கிருபையினால் இரட்சிப்பு என்று சொல்லப்படுகிறது. பவுல் சொல்லுகிறார், நான் இருக்கிறது தேவனுடைய சுத்த கிருபை என்று சொல்லுகிறார். மேலும் தம்முடைய கிருபயினால் என்னை அழைத்த தேவன் என்றும் கூறுகிறார். ஊழியமே தேவனால் விசுவாசிகளுக்கு கொடுக்கப்பட்ட கிருபை என்று சொல்லுகிறார் (எபேசியர் 3:2,7,8,11). கிருபையின் காலம் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த உலக வாழ்வில் நானும், எனக்கென்று இருக்கின்ற எல்லாமே ஆண்டவரால் மட்டும் என்ற உணர்வுடன் வாழ வேண்டும்.



இவ்வசனத்தில் ஆண்டவர் சத்தியத்தை யாக்கோபுக்கும், கிருபையை ஆபிரகாமுக்கும் கட்டளையிடுகிறார். ஏன் தெரியுமா? யாக்கோபுக்குத் தேவை உண்மை, சத்தியம். ஆபிரகாமுக்குத் தேவை கிருபை. அன்பு சகோதரனே, சகோதரியே ஒருவேளை நீங்கள் ஏமாற்றுபவராக, பொய் சொல்லுபவராக இருந்தால் ஆண்டவர் தமது சத்தியத்தைத் தருகிறார் அல்லது விசுவாசத்தோடு வாழ்பவராக இருந்தால் தமது கிருபையைத் தர வல்லவராயிருக்கிறார்.



சிந்தனை: துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்து கொள்ளும். சங்கீதம் 32:10


ஜெபம்: வற்றாத கிருபை நதியே, உமது கிருபையை விசுவாசத்தால் பெற்றுக் கொள்ள எங்களுக்கு உதவி செய்யும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்