வேதபகுதி:ஆமோஸ் 5 : 21- 27
உங்கள் பண்டிகைகளைப் பகைத்து வெறுக்கிறேன்; உங்கள் ஆசரிப்பு நாட்களில் எனக்குப் பிரியமில்லை. வசனம் .21
இஸ்ரவேல் ஜனங்களின் பண்டிகை பலிகளைத் தேவன் வெறுக்கிறார். பலியைப் பார்க்கிலும் நீதியும், உண்மையும், மனத்தாழ்மையுமான வாழ்க்கை வாழ்வதையே தேவன் விரும்புகிறார்.
மீகா 6:8ல் கூறப்பட்டிருக்கிறது; மனுஷனே, நன்மை இன்னதென்று தேவன் நமக்கு அறிவித்திருக்கிறார்.
எது எளிமையான காரியங்கள்
1. நியாயஞ்செய்தல் 2.இரக்கத்தை சிநேகித்தல் 3. தேவனுக்கும் மனிதருக்கும் முன்பாக மனத்தாழ்மையாய் நடத்தல். இவைகளே பலியைப் பார்க்கிலும் பண்டிகையைப் பார்க்கிலும் தேவனுக்குப் பிரியமானவைகள்.
ஒரு அரசு அலுவலகத்தில் நேர்மையாய்ப் பணியாற்றிக் கொண்டிருந்த கிறிஸ்தவ சகோதரர் ஒருவர் அவரது மேலதிகாரியால் அநேக உபத்திரவங்கள் அனுபவித்தார். ஆனாலும் இந்த சகோதரர் தன் நேர்மையில் இருந்து சற்றும் வழிவிலகவில்லை. நன்மையே செய்து கொண்டு இருந்தார். ஆண்டவர் அவரைக் கனப்படுத்தி வேறு ஊருக்கு மாற்றம் கிடைக்கச் செய்தார். பொறுப்புகளில் பொறுமையாய், மனத்தாழ்மையாய், உண்மையாய் இருங்கள். கர்த்தரால் உயர்த்தப்படுவீர்கள்.
சிந்தனை: தன்னைத்தான் தாழ்த்துகிற எவனும் உயர்த்தப்படுவான். கர்த்தருக்குள் உங்களைத் தாழ்த்துங்கள். அவர் உங்களை உயர்த்துவார்.
ஜெபம்: தேவனே நியாயஞ்செய்து இரக்கத்தைச் சிநேகித்து உமக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடக்கப் பெலன் தாரும் . ஆமேன்.
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்
newcastle accountants Counter
0 comments:
கருத்துரையிடுக