வேதபகுதி: ஆமோஸ் 6 : 1 - 7
தீங்கு நாள் தூரமென்றென்னி கொடுமையின் ஆசனம் கிட்டிவரும்படி செய்து... வசனம் 3
இஸ்ரவேல் ஜனங்கள் உல்லாசமான வாழ்வு வாழ்ந்து வந்தார்கள். அவர்களது வாழ்க்கை விபச்சாரத்தாலும், வேசித்தனத்தாலும், தீய சிந்தனைகளாலும் தங்களைக் கறைப்படுத்திக் கொண்டு தீய செயலுக்கு உள்ளானார்கள்.
மதுபானத்தினால் வெறிகொண்டு வன்முறை போன்ற முறைகேடற்ற செயல்களைச் செய்து சோரம் போனார்கள்.
இஸ்ரவேல் ஜனங்கள் தீங்கு நாட்கள் தூரமென்றெண்ணி கொடுமையின் ஆசனங்கள் தாங்களைக் கிட்டிவரும்படிச் செய்தார்கள்.
பிரியமானவர்களே தேவன் நம்மை அசுத்தத்திற்கு அல்ல, பரிசுத்தத்திற்கென்றே அழைத்திருக்கின்றார். சிறு சிறு பாவங்கள் கூட நம்மை அடிமைப்படுத்திவிடாதபடிக்கு பரிசுத்தமாகவே வாழ அழைத்திருக்கிறார்.
தேவன் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவர். ஆகவே பிரியமானவர்களே, நம்முடைய பாவங்களை அவருக்கு முன்பாக அறிக்கையிடுவோம். நம்முடைய பாவத்தின் மூலம் அவரைக் கோபப்படுத்தாதிருப்போம். ஏனென்றால் தாவீது கூறுகிறார். அவருடைய கோபம் ஒரு நிமிடம் அவருடைய தயவோ நீடிய வாழ்வு. ஆகவே அவரது தயவை நாடி இரக்கத்தைப் பெற்றுக் கொள்வோம்.
சிந்தனை: தீங்கு நாள் தூரமல்லவே. நாம் கடைசி நாட்களில் வந்திருக்கிறோம். ஆகவே தீங்குநாளுக்கு முன் மனந்திரும்பி அவருடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளுவோம்.
ஜெபம்: கர்த்தாவே, உமது ராஜ்ஜியத்துக்குள் பிரவேசிக்க எனக்கு உதவி செய்யும். ஆமேன்.
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்
0 comments:
கருத்துரையிடுக