வேதபகுதி: ஆமோஸ் 7 : 1 - 3
யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் சிறுத்துப் போனான் வசனம் 2
ஆண்டவர் மனிதனைப் படைத்து பின்பு அவர்களைப் பார்த்து நீங்கள் பலுகிப் பெருகிப் பூமியை நிரப்புங்கள் என்று ஆசிர்வதிதார். ஆனால் மனிதனோ தேவகிருபை இழந்து தேவசாயலை இழந்து சிறுத்துப் போனான்.
இஸ்ரவேல் ஜனங்கள் தேவன் அன்பும், இரக்கமும், மனதுருக்கமும் நிறைந்தவர் என்று தேவனின் ஒரு பக்க குணங்களைச் சொல்லி தங்களைத் திரும்பத் திரும்ப பாவத்திற்கு அடிமைகளாக்கினர். அதே நேரத்தில் நீதியுள்ள நியாயாதிவதி என்பதை மறந்து நியாயத்தைப் புரட்டி அநியாயம் செய்ததினாலே தேவன் அவர்கள் மீது தமது கோபத்தை ஊற்றினார்.
மேலும் நம் சிறுமை நீங்க அவரைப் பற்றி அறியும் அறிவில் வளர வேண்டும் (2 பேதுரு 1 : 2 ). அவரைப்பற்றி நாம் அதிக ஞானமும், அவருடன் அதிக ஐக்கியமுங்கொள்ளும்போது ஈசாக்கைப் போல மகாபெரியவர்களாவோம் ( ஆதி 26:13)
சிந்தனை: தேவனின் அறிவு வேதனை மறைவு.
ஜெபம்: ஆண்டவரே உம்மை அதிகம் அறிந்துகொள்ள பிரகாசமுள்ள மனக்கண்களைத்தாரும். ஆமேன்.
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்
0 comments:
கருத்துரையிடுக