வேதபகுதி: ஆமோஸ் 6 : 8 - 14
பெரிய வீட்டைத் திறப்புகள் உண்டாகவும், சிறிய வீட்டை வெடிப்புகள் உண்டாகவும் அடிப்பார். வசனம் 11
இஸ்ரவேல் ஜனங்கள் பாவம் செய்து ஆண்டவரின் கோபம் அவர்களின் மீது எழுந்ததினால் சாபத்திற்குள்ளானார்கள். இஸ்ரவேலரின் மேன்மைகள் தேவனாகிய கர்த்தரால் வெறுக்கப்பட்டது.
இஸ்ரவேல் ஜனங்கள் தேவன் அன்பும், இரக்கமும், மனதுருக்கமும் நிறைந்தவர் என்று தேவனின் ஒரு பக்க குணங்களைச் சொல்லி தங்களைத் திரும்பத் திரும்ப பாவத்திற்கு அடிமைகளாக்கினர். அதே நேரத்தில் நீதியுள்ள நியாயாதிவதி என்பதை மறந்து நியாயத்தைப் புரட்டி அநியாயம் செய்ததினாலே தேவன் அவர்கள் மீது தமது கோபத்தை ஊற்றினார்.
சங்கீதக்காரனாகிய தாவீது கூறுகிறார்; அவர் பூலோகத்தாரை நீதியோடும் சகல ஜனங்களை சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார் என்று கூறுகிறார். எனவே நாம் அனைவரும் நியாயத்தீர்ப்பிற்கு உள்ளானவர்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. எனவே அவருடைய நியாயத்திற்குப் பயந்து அவருடைய நீதிக்கு கீழ்ப்படிந்து வருகின்ற கோபாக்கினைக்கு நம்மை தப்புவித்து அவரோடு நீதியாய் ஆளுகை செய்வோம்.
சிந்தனை: தேவன் அன்புள்ளவர் என்றாலும் அவர் நீதியுள்ள நியாயாதிபதி. எனவே நீதிபதியாம் தேவனுக்கு முன்பாக நடுங்குவோம்.
ஜெபம்: உமது நீதிக்கும், நியாயத்திற்கும் கீழ்ப்படிந்து நடக்க ஞானமுள்ள இருதயத்தைத் தாரும் .ஆமேன்.
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்
0 comments:
கருத்துரையிடுக