மதியம் செவ்வாய், 20 நவம்பர், 2007

எளியவனின் விலை

வேதபகுதி: ஆமோஸ் 8:4- 8


தரித்திரரைப் பணத்துக்கும் எளியவர்களை ஒரு ஜோடு பாதரட்சைக்கும் கொள்ளும்படிக்கும்...வசனம் 5



உலக வரலாற்றில் கருப்பு இன மக்களை சந்தைகளில் கால்நடைகளைப் போல் விற்று, சிறுமைப்பட்டவர்களை, ஏழை எளிய மக்களை இழிவாக நடத்திய செயல்களை நாம் நன்கு அறிவோம்.



இஸ்ரவேல் நாட்டிலும் பணக்கார வியாபாரிகள் ஏழை எளிய மக்களைப் பல வழிகளில் துன்புறுத்தினர் . சிறுமைப்பட்ட மக்களை ஒடுக்கினர். எப்படியென்றால் அவர்களது வியாபாரத்தில் உண்மை காணப்படவில்லை. கள்ள தராசு, அளவைகள் , எடைக்கற்கள் பயன்படுத்தப்பட்டன, உணவுப் பொருட்களிலே உதவாத குருணை முதலியவற்றை கலந்து வியாபாரம் செய்தனர். ஏழைகளிடம் இவைகளை வாங்கும்போது எடையளவை அதிகமாக்கியும் விற்கும்போது குறைந்த எடையளவை பயன்படுத்தி கொள்ளையடித்தனர். இப்படிப்பட்ட வியாபாரிகளைக் கடவுள் எச்சரிக்கிறார். ஏனென்றால் நம்முடைய தேவன் நீதிபரர்.




இன்றைய வாழ்விலும் நமது உலகில் எங்கும் இன்றும் கள்ளச்சந்தையில் அதிக விலைக்குப் பொருட்கள் விற்கப்படுகின்றன. உணவுப் பொருட்களில் கலப்படம் உயிருக்கே ஆபத்து எனத் தெரிந்தும் துணிகரமாய்க் கலப்படம் செய்கின்றனர்.



கள்ளக்கடத்தல் நடைபெறுகிறது. இவைகள் யாரைப் பாதிக்கிறது? எளியவர்களை அல்லவா? தேவன் எளியவர்கள் பக்கம் என்பதை மறந்து விட வேண்டாம்.



சிந்தனை: எளியவனுக்குக் கர்த்தர் துணை


ஜெபம்: தேவனே எளியவர்களை என்னுடைய வாழ்க்கையில் நேசிக்க உதவிபுரியும்



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்