மதியம் புதன், 21 நவம்பர், 2007

புதிய பஞ்சம்

வேதபகுதி: ஆமோஸ் 8 : 11 - 14


கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை ஆனுப்புவேன். வசனம் 11



இங்கே ஆண்டவர் சொல்லும் பஞ்சம் உண்வுப் பஞ்சமல்ல. தண்ணீர் பஞ்சமல்ல. இவையெல்லாம் மனித சரீர வாழ்வுக்குரியவை. அதைவிட மேலான பஞ்சத்தைப் பற்றி கடவுள் குறிப்பிடுகிறார். அது என்ன? கர்த்தருடைய வார்த்தைக்கு பஞ்சம். இது எதைக் குறிக்கிறது? இஸ்ரவேலரின் வாழ்வில் கடவுளுடைய உறவு அறுபட்ட நிலையைக் குறிக்கிறது. கல்லுகளை அப்பங்களாக மாற்றும் என்ற சோதனைக்காரனுக்கு ஜீவ அப்பமாகிய இயேசு மனிதன் அப்பத்தினாலே மாத்திரமல்ல தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்றாரே அந்த தேவனுடைய வார்த்தைக்குத் தான் பஞ்சம்.



அந்நாட்களின் நாட்டின் பொதுப் பிரச்சனைகளுக்கும் தேவைகளுக்கும் ஆண்டவரின் சித்தத்தை அறியவும் வழிநடத்துதல்களைப் பெறவும் மக்களும் அரசனும் தீர்க்கதரிசிகளை நாடிச் செல்வது வழக்கம். இறைவன் தமது வார்த்தைகளை அவர்களுக்கு வெளிப்படுத்துவார். மக்கள் பெற்று மனமகிழ்வர்.




ஆனால் இப்போதே அதற்குப் பஞ்சம் வரும் என கடவுள் உரைப்பது ஏன்? இஸ்ரவேல் மக்கள் பலமுறை கடவுளுடைய வார்த்தைகளையும் வழி நடத்துதல்களையும் புறக்கணித்து விட்டனர்.



இதுவே தேவன் தரும் மாபெரும் தண்டனை.




சிந்தனை: நீர் விளம்பின வேதமே நலம்.


ஜெபம்: இறைவா உம் வார்த்தையைக் கேட்டு அதின் படி நடக்க எனக்கு உதவி புரியும் . ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்