மதியம் புதன், 21 நவம்பர், 2007

கசப்பு மிக்க நாள்

வேதபகுதி: ஆமோஸ் 8 : 9 - 10


அவர்களுடைய முடிவைக் கசப்பான நாளாக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். வசனம் 10



2004 டிசம்பர் 26. மறக்கமுடியாத நாள் மிகுந்த உயிர்சேதத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்தி மக்கள் அனைவரையும் மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கிய நாள். சுனாமி தாக்கிய கசப்பான அனுபவம் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்.



இங்கே ஆண்டவரும் இஸ்ரவேலர் எதிர்பார்த்து காத்திருந்த நாளை கசப்பான நாளாக்குவேன் என்கிறார். இஸ்ரவேலருடைய வாழ்வில் கர்த்தருடைய நாள் மகிழ்ச்சியின் நாள். விடுதலையின் நாள். காரணம், அந்நாளில் இஸ்ரவேலருக்கு நன்மை, ஆசிர்வாதம், மீட்பு, வெளிச்சம் உண்டென்றும், இஸ்ரவேலரைப் பகைப்பவர்களுக்குத் தீமை, அழிவு என்றும் இஸ்ரவேலர் நம்பினர். ஆண்டவரும் தம்மை இஸ்ரவேல் மக்களுக்கு வெளிப்படுத்தி அவர்களது வரலாற்றிலே செயலாற்றியதால் கர்த்தருடைய நாள் அவர்களுக்கு நம்பிக்கையின் நாள் மட்டுமல்ல களிகூறுதலின் நாள்.




ஆனால் அந்தோ பரிதாபம் அவர்களது எதிர்பார்புக்கு எதிர்மாறாக ஆண்டவர் வாக்கு உறைக்கிறார். ஏன்? இஸ்ரவேலரின் மாய்மாலமான வழிபாட்டைக் கடவுள் வெறுக்கிறார்.



அநீதி நிறைந்த சமூக சமய வாழ்வை கடவுள் முடிவுக்குக் கொண்டு வருகிறார். நடக்கப்போவது என்ன? மக்கள் புலம்பி தவிக்கப் போகிறார்கள். மக்கள் கைவிடப்பட்ட நிலைக்கு தள்ளப்படப்போகிறார்கள்.



கடவுளின் தண்டனைக்கு யாரும் தப்பமுடியாது. போலியான வாழ்வு. வெளிவேஷமான கடவுள் பக்தி நம்மை கடவுளின் பிள்ளைகளாக்கமாட்டாது. தண்டனை நிச்சயம் உண்டு. ஆகவே இன்றே மனந்திரும்பு.





சிந்தனை: உண்மை வழி நடந்திடும் உத்தமனுக்குக் கர்த்தர் துணை.


ஜெபம்: கடவுளே, சுத்த இருதயத்தை எனக்குத் தாரும். நிலைவரமான உமது தூய ஆவியால் என்னை புதுப்பியும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்