உபவாசம்

"நாங்கள் உபவாசம் பண்ணி , எங்கள் தேவனிடத்தில் அதைத் தேடினோம்; எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்" எஸ்ரா 8:23


இந்தப் பகுதியில் எஸ்ரா என்ற வேதபாரகன் பாபிலோன் அடிமைத்தனத்திலிருந்து அர்த்தசஷ்டா ராஜாவினால் எருசலேமிற்கு அனுப்பப்பட்ட வழியில் தன்னோடு கூட வந்த ஜனங்கள் எல்லாரிடமும் உபவாசம் செய்ய வேண்டும் என்று கூறினார்,  ராஜா எருசலேம் தேவாலயத்திற்குத் தந்த பொருட்களை உண்மையாய் ஒப்புவிக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனமாய் இருந்தார். இவர் உபவாசம் செய்ய குறிப்பிட்ட காரணங்கள் 

1. தேவனுக்கு முன்பாகத் தங்களைத் தாழ்த்தவும் 
2. தங்களுக்காகவும் 
3. தங்கள்  பிள்ளைகளுக்காகவும் 
4. தங்களுடைய சகல பொருள்களுக்காகவும் 
5. செவ்வையான வழியைத் தேடுகிறதற்காகவும் 

நாமும் மேலே குறிப்பிட்ட காரணங்களுக்காகவும் உபவாசம் செய்ய அழைக்கப்படுகின்றோம். நாம் கர்த்தரிடம் நம்மைத் தாழ்த்தி ,  நம்முடைய பிள்ளைகளின் இரட்சிப்புக்காகவும் ஆசீர்வாதத்துக்காகவும் , தேவன் தந்த சகல பொருட்களுக்காகவும் , அதைத் தீங்கான காரியத்துக்கு செலவிடாமல் காத்துக் கொள்ளவும் ஜெபிக்க வேண்டும் .

மேலும் வேதனை உண்டாக்கும் வழிகளை அகற்றி தேவன் நம்மை செவ்வையான பாதையில் நடத்தும் படியாகவும் ஜெபிக்க வேண்டும் . அப்படி நாம் ஜெபிக்கும் போது எஸ்ராவின் விண்ணப்பத்தைக் கேட்ட ஆண்டவர் நம்முடைய விண்ணப்பத்திற்கும் பதில் தந்து நம்மை ஆசீர்வதிப்பார் 

சிந்தனை : நம்முடைய உபவாச ஜெபம் எப்படி இருக்கின்றது ?


ஜெபம்: அன்பின் தேவனே நான் உண்மையாக உபவாசித்து ஜெபிக்கவும் பரிசுத்தத்தில் வளர்ந்து பெருக்கவும் கிருபை புரிந்தருளும் . இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறோம் பிதாவே. ஆமேன்.