ஆசீர்வதிக்கும் தேவன்


வேத பகுதி: யாத்திராகமம் 23

                "உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்." யாத்திராகமம் 23:25

                 நம்முடைய தேவன் நம்மை ஆசீர்வதிக்கவே விரும்புகின்றார். நாம் சுகத்தோடு ஆரோக்கியத்தோடு பூமியில் வாழுவதை அவர் விரும்புகின்றார். அதற்காக நாம் செய்ய வேண்டிய கட்டளைகளாக மோசேயின் மூலம் யாத்திராகமம் 23ம் அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.  அவைகளாவன


  • அபாண்டமான சொல்லை ஏற்றுக்கொள்ள வேண்டாம் 
  • திரளான கூட்டமாகத் தீங்கு செய்யும்போது அவர்களோடு சேராதே 
  • நியாயத்தைப் புரட்ட மிகுதியான பேர்களோடு சேராதே 
  • உன்னுடைய சத்துருவாயிருப்பவனுக்கு உதவி செய் 
  • எளியவர்களின் நியாயத்தைப் புரட்டாதே 
  • கள்ளக் காரியத்துக்குத் தூரமாயிரு 
  • கொலை செய்யாதே 
  • பரிதானம்(லஞ்சம்) வாங்காதே 
  • அந்நியனை ஒடுக்காதே 
  • அந்நிய தேவர்களை வணங்காதே 
  • உன்னுடைய முதற்பலனை தேவனுடைய ஆலயத்திற்கு கொண்டுவருவாயாக

              மேலே குறிப்பிடப்பட்டுள்ள கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படிந்து நடக்கும் போது நம்மையும் தேவன் ஆசீர்வதித்து நாம் வாழுகின்ற பூமியிலே சுகமாய்த் தங்கியிருக்கும்படிச் செய்வார். மேலும் நமக்குப் பரலோக வாழ்வையும் தந்து ஆசீர்வதிப்பார்.

சிந்தனை: ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக் கொள்ளும்படியாக நான் தேவனுடையக் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றேனா?

ஜெபம்: அன்பின் ஆண்டவரே நான் வாழுகின்ற இந்த உலக வாழ்க்கையில் நான் உம்முடையக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்து ஆசீர்வாதங்களைச் சுதந்தரித்துக் கொள்ளும்படிக் கிருபை புரிந்தருளும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்