மதியம் வெள்ளி, 5 அக்டோபர், 2007

உன் கை ஓங்கும்

வேதபகுதி:மீகா 5:9 - 11

உன்னுடைய கை உன் விரோதிகள்மேல் உயரும் வசனம்.9



இஸ்ரவேல் பகைவர்களை வெற்றி கொள்கிற ஒரு போர்வீரனுக்கு சமமாக இங்கே அறிமுகப்படுத்தப்படுகிறது. குதிரைகளை சன்கரிப்பேன், இரதங்களை அழித்து விடுவேன் என்பது போருக்கு பயன்படுத்தக் கூடிய யாவற்றையும் நீக்கி தேவனாகிய கர்த்தர் ஒருவரே ஜெயம் கொடுக்கிறவராக இருப்பார். சமாதானத்தை நிலவச் செய்வார்.



துருக்கியர் கையிலிருந்து எருசலேமை மீட்டுக் கொள்ள ஆங்கில தளகர்த்தர் ஆலன்பீ படையுடன் எருசலேமை வந்தடைந்தபோது அவர் துப்பாக்கியை பிரயோகிக்கவில்லை, ஊக்கமாக ஜெபித்தார். அவர் ஜெபித்துக் கொண்டிருக்கும்போதே வலிமை வாய்ந்த படை ஒன்று எருசலேமை அணுகிக் கொண்டிருக்கிறது என்ற செய்தி துருக்கியரிடையே பரவியது. தேவனே தமது சேனையைக் கொண்டு தங்களை அழிக்க வந்து விட்டார் என துருக்கியர் எண்ணி நடுங்கினர். தேவனே வெற்றி சிறக்கப் பண்ணினார்.



யூதர் இவை எல்லாவற்றையும் கண்டனர். அவர்கள் எப்பொழுதும் போலவே இருக்கின்றனர். அவர்கள் எத்தகைய வீழ்ச்சியையும், எத்தகைய பலவீனத்தையும் தங்கள் சத்துவத்தில் எத்தகைய குறைவையும் காணவில்லை.யூதரைத் தவிர எல்லா வல்லமைகளும் அழிந்தொழிந்தன. யூதருடைய நித்தியத்தின் காரணமென்ன?



சிந்தனை: தமது ஜனங்களை சாத்தானின் கையிலிருந்து விடுவிக்க அவரே நமக்காக யுத்தம் பண்ணுவார். அவரை நம்பி பற்றிக் கொண்டால் நம்முடைய எல்லாக் காரியங்களிலும் வெற்றி சிறக்கப் பண்ணுவார்.


ஜெபம்: தேவனே, சத்துருவான சாத்தானின் கையிலிருந்து என்னை விடுவித்துக் காத்துக் கொள்ளும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்