நியாயத்தீர்ப்பு

வேதபகுதி: எண்ணாகமம் 20 : 7 - 12


"கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்துக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார். "எண்ணாகமம் 20 : 12



இந்தப் பகுதியில் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்து தேசத்திலிருந்து கானான் தேசத்திற்கு அழைத்துக் கொண்டுச் செல்லுகின்ற மோசேக்கும் ஆரோனுக்கும் தண்டனை கிடைக்கின்றது. நாம் நினைத்துக் கொண்டிருக்கிறக் காரியம் என்னவென்றால் நமது ஆண்டவர் மன்னிப்பின் தேவன் நாம் எப்படிப்பட்டத் தவறுகள் செய்தாலும் நம்மை மன்னித்து நமது தவறுகளையெல்லாம் கடலின் ஆழத்திலே போட்டுவிடுவார். ஆனால் நாம் செய்கின்றது தவறு என்று நமக்குத் தெரிந்தும் மீண்டும் மீண்டும் நாம் செய்கின்ற காரியங்களுக்கு மன்னிப்பு உண்டு ஆனாலும் ஆண்டவர் நாம் மீண்டும் அந்தத் தவறைச் செய்யாதபடிக்கு நாம் செய்த பாவத்திற்கு நமக்குத் தண்டனை கொடுக்கிறார்.



மோசே என்ற தேவ மனிதன் "என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன். எண்ணாகமம் 12 :7" என்று கர்த்தரால் சாட்சி கொடுக்கப்பட்டவர். ஆனால் அவர் செய்தது ஒரே ஒரு சிறிய பாவம் தான். கர்த்தர் மோசேயைப் பார்த்துக் கன்மலையினிடத்தில் போய் பேசு என்றார், ஆனால் இவரோ கன்மலையை அடித்தார். ஆகவே கர்த்தர் என்னிடத்தில் நம்பிக்கை வையாமல் போனதினால் உங்களை நான் கானான் தேசத்திற்குப் பிரவேசிக்கப் பண்ணுவதில்லை என்று அவர்களுக்குத் தண்டனை கொடுக்கிறார். நாமும் இப்படிப் பட்டச் சிறிய காரியங்களை இன்னும் செய்துக் கொண்டிருப்போமானால் நமக்குக் கண்டிப்பாகத் தண்டனை உண்டு. நாம் தண்டனைக்குத் தப்புவிக்கப்படவேண்டுமென்றால் இன்றே நாம் மனந்திரும்புவோம்.





சிந்தனை: "பாவத்தில் சிறியப் பாவம் என்றோப் பெரியப் பாவம் என்றோ இல்லை"


ஜெபம்:
தேவனே நான் எப்பொழுதும் உமக்குக் கீழ்ப்படிய உமது கற்பனைகளைப் பின்பற்ற உதவி புரியும். ஆமேன்



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்